Just In
- 9 min ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 57 min ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 1 hr ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 1 hr ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சத்தமில்லாம டர்ர்ர்... விட்டு ரொம்ப நாறுதா? அதைத் தடுக்க சில டிப்ஸ்...
உடலில் நடக்கும் ஒரு இயற்கை நிகழ்வுகளில் ஒன்று தான் வாயு வெளியேறுவது. இந்த வாயு தொல்லையானது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உணவு செரிமானமின்மை, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றால் ஏற்படும்.
அடிக்கடி டர்ர்ர்ர்ர்... கட்டுப்படுத்த சில யோசனைகள்!
இத்தகைய வாயுவானது உடலில் இருந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியேறலாம். அது அலுவலக மீட்டிங்கின் போதோ அல்லது துணையுடன் டேட்டிங்கில் இருக்கும் போதோ என எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். அப்படி அது வெளியேறும் போது கடுமையான துர்நாற்றம் வீசும்.
வாய்வு தொல்லையால் ரொம்ப அவஸ்தைப்படுறீங்களா? இயற்கை வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க...
அந்நேரத்தில் அருகில் இருப்போரின் முகத்தைப் பார்த்தால், அவர்கள் முகத்தை சுளிக்கும் விதமே நம்மை தர்மசங்கட நிலைக்கு தள்ளும். எனவே இப்படி தர்ம சங்கட நிலைக்கு தள்ளும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபட ஒருசில இயற்கை நிவாரணிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா!!!
சோம்பு
வெறும் சோம்பை வாயில் போட்டு மென்றாலோ அல்லது சோம்பை கொதிக்கும் நீரில் போட்டு 3-5 நிமிடம் கொதிக்க விட்டு குடித்தால், 5-10 நிமிடங்களில் வாய்வுத் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் தரும்.
இஞ்சி
இஞ்சி கூட வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை தரும். அதற்கு சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது ஒரு நாளில் மூன்று வேளை இஞ்சி டீ போட்டு குடித்தாலோ, நல்ல மாற்றம் தெரியும்.
சீரகம்
ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கப் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு, வடிகட்டி உணவு உண்ணும் முன் குடித்தால், வாய்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
வாய்வுத் தொல்லை மற்றும் செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை
1/2 டம்ளர் நீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குடிக்க துர்நாற்றம் வீசும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
புதினா
புதினாவை நீரில் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வர வாய்வுத் தொல்லை நீங்கும்.
பட்டை
பட்டை கூட வாய்வு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் தரும். அதற்கு வெதுவெதுப்பான சோயா பாலுடன், 1/2 டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து 5 நிமிடம் கழித்து, மீண்டும் அந்த கலவையை சூடேற்றி மெதுவாக குடித்து வந்தால், நாற்றம் வீசும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஏலக்காய்
டீ போடும் போது, அதில் ஏலக்காயை போட்டு கொதிக்க விட்டு, அந்த டீயை குடித்து வந்தால், வாய்வுத் தொல்லை நீங்கும்.
பெருங்காயத் தூள்
உணவில் நல்ல வாசனையைத் தரும் பெருங்காயத் தூளை, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை வயிற்றின் மேல் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
பூண்டு
பூண்டிற்கும் வாய்வு தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் குணம் உள்ளது. அதற்கு சமைக்கும் உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள் அல்லது தினமும் ஒரு பச்சை பூண்டு சாப்பிட்டு வர வேண்டும்.