Just In
- 2 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 3 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 3 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 4 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இளம் பெண்ணின் மூளைக்குள் பல், முடி, எலும்புகளுடன் வளர்ந்த ஓர் விசித்திர ஜந்து!!!
ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் யாமினி கரணம், 26 வயது நிரம்பிய இளம் பெண்ணான இவர் ஓர் பி.எச்.டி. மாணவர். கல்வியின் காரணமாக அமெரிக்காவில் இருக்கும் இன்டியான மாகணத்தில் வாழ்ந்து வந்தார்.
இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!
அனைவரையும் போல இவரும் சாதரணமாக தான் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால், திடீரென அடிக்கடி மயக்கமும், சரியாக பேச முடியாத நிலை, தலைவலி, வகுப்பறையில் கவனிக்க முடியாது பல வகைகளில் தடுமாறி வந்தார் யாமினி.
ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம், டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!!
மருத்துவர்கள் இவரை ஆராய்ந்து, இவரது மூளையில் கூம்புக் கட்டி (Pineal Tumor) வளர்ந்துள்ளதாக கூறினார்கள். ஆனால், அது ஓர் விசித்திரமான ஜந்து போன்றது என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை...
பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் ஒட்டுண்ணியாக வளரும் இரட்டை சகோதரி!!!
விசித்திரமான ஜந்து
யாமினியின் மூளையை பரிசோதித்து மருத்துவர்கள், அவரது மூளையில் ஏதோ கட்டி இருப்பதாக கண்டறிந்தனர். ஆனால், அது எது போன்றது என அறியாமல் குழம்பி இருந்தனர். மருத்துவர்கள் ஒருவருக்கு ஒருவர் இதை என்ன செய்வது என வாதிட்டு வந்தனர்.
Image Courtesy
புரியாத புதிர்
அனைத்து வகை பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மேற்கொண்டும், எவராலும் சரியான பதிலை கூற முடியவில்லை. யாமினியின் மூளையில் மருத்துவர்கள் கண்டறிந்த கட்டி புரியாத புதிராக நீடித்தது.
Image Courtesy
யாமினியின் நிலை
சில சமயங்களில் 14 நாட்கள் கூட உறங்கியப்படியே இருந்தாராம் யாமினி. இந்நிலை யாமினியின் நண்பர்களையும், உறவினர்களையும் மிகவும் கவலையடைய செய்தது.
Image Courtesy
யாமினி வருத்தம்
தனது வலைபதிவு தளத்தில் யாமினி, "இதற்கு யாரேனும் சீக்கிரம் ஓர் முடிவு கூறுங்கள், கடவும், மருத்துவர் அல்லது யாரேனும் கூறுங்கள்..." என்று வருத்தமாக பதிவேற்றம் செய்திருந்தார். இந்த பதிவை கடந்த மார்ச் மாதம் 15 நாள் யாமினி பதிவேற்றம் செய்திருந்தார்.
Image Courtesy
ஆன்-லைனில் நிதியுதவி
யாமினியின் நண்பர்கள், இவரது நிலையை காட்டி ஆன்-லைனில் நிதியுதவி திரட்டினர். அதில் மொத்தம் 32,437 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி கிடைத்தது.
யாமினியே நேரடியாக ஆராய்ச்சி
பிறகு தனது நிலையை குறித்து தானே நேரடியாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார் யாமினி. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருக்கும் கபாலம் சார்ந்த "Skull Institute"ல் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
Image Courtesy
கீ-ஹோல் அறுவை சிகிச்சை
அந்த ஆராய்ச்சி மையத்தில் இருந்த டாக்டர்.ஷாஹினியன் யாமினிக்கு கீ-ஹோல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் மூலம் யாமினியின் மூளையின் உட்பகுதிகளை கண்டறிந்து அதிர்ச்சியடைந்தார்.ஏனெனில் அவரது மூளையில் வளர்ந்து வந்தது கட்டியல்ல ஓர் அயல் திசுக்கட்டி (Teratoma) என அப்போது தான் தெரிய வந்தது.
Image Courtesy
மருத்துவர் அதிர்ச்சி
டாக்டர்.ஷாஹினியன் 8000'திற்கும் மேற்பட்ட மூளை கட்டி சார்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதில் இது தான் இரண்டாவது அயல் திசுக்கட்டி (Teratoma) என அவர் கூறினார். இதை கட்டி என கூறுவதை விட, பேய் போன்ற இரட்டை என கூறலாம். ஏனெனில், யாமினியில் மூளையில் வளர்ந்த அந்த கட்டியில், முடி, பற்கள், எலும்பு இருந்ததாக மருத்துவர்கள் கூறினார்.
Image Courtesy
26 வருடங்களாக தொல்லை
இந்த விசித்திர ஜந்து போன்ற அயல் திசுக்கட்டி (Teratoma) கடந்த 26 வருடங்களாக யாமினியை தொல்லை செய்து வந்துள்ளது. ஆனால் சமீப காலமாக அது அதிகரித்ததால் தான் அவரால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. இன்னும் கூட யாமினி மருத்துவ ஆராய்ச்சியில் தான் இருக்கிறார்.
Image Courtesy