Just In
- 56 min ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 1 hr ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 3 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
Don't Miss
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தியானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்!!
தினமும் சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்து வந்தால் நம் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் அது உதவும். பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் கூட இதை நிரூபித்துள்ளன.
பழங்காலத்திலேயே முனிவர்களாலும் துறவிகளாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த தியானக் கலை, தற்போது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு முக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாம் மேற்கொள்ளும் பல்வேறு வேலைகளிலும் கூட நம் மனத்தை ஒருமுகப்படுத்த தியானம் கை கொடுக்கிறது.
நம்முடைய சில உடல் குறைபாடுகளுக்கு தியானம் தான் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. நாம் எந்த வயதில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்பது எல்லோருக்கும் ஒரு பெரிய ப்ளஸ்! தியானம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
நேரம்
முதலில் நாம் தியானம் செய்வதற்கு சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும். பெரும்பாலும் அதிகாலை நேரமே தியானத்திற்கு உகந்த நேரமாகும். அப்போதுதான் இந்த உலகமே அமைதியாக இருக்கும்! அமைதியான தென்றல் அப்போது வீசுவதும் இதமாக இருக்கும். காலையில் முடியாதவர்கள், மாலை அல்லது இரவு உறங்கப் போகும் முன் தியானம் செய்யலாம். தினமும் ஒரே நேரத்தில் தியானத்தை மேற்கொள்வது நல்லது.
இடம்
அடுத்து, தியானம் செய்வதற்கான பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அமைதியான சூழ்நிலையில் தியானத்திற்கான வசதியுடன் அவ்விடம் இருக்க வேண்டும். பெட்ரூம், தோட்டம், மொட்டை மாடி உள்ளிட்ட இடங்கள் சிறந்தவை. பொதுவாக, சத்தம் குறைந்த இடமாக இருக்க வேண்டும்.
காலியான வயிறு
தியானம் செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தியானம் செய்தல் சரிப்படாது; சில சமயம் தூங்கி விடுவீர்கள்! அப்படியே சாப்பிட்டாலும், இரண்டு மணி நேரம் கழித்து தியானம் செய்யலாம்.
தயார் நிலையில்...
தியானம் செய்ய ஆரம்பிக்கும் முன் சில தயார் நிலைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காலணிகளைக் கழற்றி விட வேண்டும். லூசான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உட்கார்ந்து தியானம் செய்ய ஒரு குட்டிப் பாயை விரித்துக் கொள்ள வேண்டும். சம்மணம் போட்டு உட்கார்ந்து, முழங்கால்களின் மேல் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்குமாறு உட்கார்ந்து, கழுத்தை ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின், கண்களை மூடி ஓரிரு மூச்சுக்களை மூக்கு மூலம் மட்டும் இழுத்து விட வேண்டும்.
முழு கவனம்
தியானத்தில் அமரும்போது அதில் மட்டுமே உங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்தத் திறமையை வளர்த்துக் கொண்டாலே தியானத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியும். யாரும் தொந்தரவு செய்து விடாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம் இருக்கும். ஆனால், போகப் போக சரியாகி விடும்.
ரெடி, கோ...
இப்போது நீங்கள் உங்கள் தியானத்தை ஆரம்பிக்கத் தயாராகி விட்டீர்கள். மூடிய கண்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தேவையில்லாமல் திறக்க வேண்டாம். இரு புருவங்களுக்கும் இடையில் மூடிய பார்வையை நிலை நிறுத்துங்கள். நம்மையும் மீறிய ஒரு ஆற்றலை நினைத்துக் கொண்டு அதற்கு நன்றி சொல்லுங்கள். தியானத்தைத் தொடங்குங்கள்!
தியானம் அளிக்கும் நன்மைகள்!
1) தியானம் நம்மை மகிழ்விக்கும். நாமும் பிறரை சந்தோஷப்படுத்துவோம்!
2) நம் அனைத்து உணர்ச்சிகளையும் சமநிலைப்படுத்தும். உறவுகளையும் நட்புக்களையும் நீட்டிக்க உதவும்.
3) நம் கவனங்களைக் கூர்மைப்படுத்த வல்லது. தியானம் செய்வதால் படிப்பு, வேலை என்று எந்த நிலையிலும் நம் கவனம் சிதறாது.
தியானம் அளிக்கும் நன்மைகள்!
4) நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். எந்தவிதமான கடின வேலையையும் எளிதாக செய்து முடிக்கலாம்.
5) தியானம் செய்யும் போது, நாம் கடவுளை அருகில் உணர முடியும். முடிந்தால், தனியாக அவருடன் 'பேசவும்' முடியும்.
6) தியானம் செய்வதால் நம் மனம் அமைதியடையும். கோபங்கள் விலகும். எல்லாவிதத்திலும் திருப்தி கிடைக்கும்.