Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
உடலில் இரத்த கட்டி உண்டாகி இருப்பதை வெளிக்காட்டும் 6 அறிகுறிகள்!
இந்த 8 அறிகுறிகளை வைத்து உங்கள் உடலில் இரத்த கட்டிகள் உண்டாகியிருப்பதை கண்டறிய முடியும்.
உடலின் வெளிப்புறத்தில் உண்டாகும் மாற்றங்களை நாம் கண்டறிய முடியும். ஆனால், உட்புற உடலில் உண்டாகும் மாற்றங்களை கண்டறிவது கடினம். நமது உடல் எந்த ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்தாலும், அதை ஒருசில அறிகுறிகள் மூலம் நமக்கு தெரிவிக்க முயலும்.

அந்த வகையில் உடலில் இரத்த கட்டிகள் உண்டாகியிருந்தால், நமது உடலில் தென்படும் அறிகுறிகள் பற்றி இனிக் காணலாம்...

கால் வலி!
கால் வலி அல்லது மென்மையான வீக்கம் போல உண்டாவது. இது ஆழமான இரத்த உறைவு உண்டாகியிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறி ஆகும். சில சமயங்களில் இதனால் தசை பிடிப்பு போன்று கூட ஏற்படலாம்.

இருமல்!
கால நிலை மாற்றம் போன்ற எந்த காரணமும் இன்றி இருமல் வந்துக் கொண்டே இருப்பதும் ஒரு அறிகுறி தான். இதய படபடப்பு, மார்பு வலி, மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

மூச்சு திணறல்!
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், நுரையீரலில் இரத்த கட்டிகள் உண்டாகியிருக்கலாம். இது உண்டாகியிருந்தால், இதய படபடப்பு, மயக்கம், அதிகரிக்கும் இதய துடிப்பு போன்றவை ஏற்படும்.

மார்பு வலி!
இழுத்து, ஆழமான மூச்சு விடும் போது இதய வலி உண்டாவது. இதுவும், நுரையீரலில் இரத்த கட்டி உண்டாவதன் அறிகுறி தான். இது அபாயமான நிலை அடைவதற்கு முன்னர் நீங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

சருமத்தில் சிவப்பு கோடுகள்!
இரத்த கட்டிகள் உண்டாகியிருந்தால், இரத்த நாளத்தின் பாதை வெளிப்புறத்தில் சிவப்பு கோடுகள் தோன்றும். இது சாதாரண காயம் அல்ல இதை நீங்கள் பரிசோதிக்க வேண்டும். கை, கால்கள் இந்த சிவப்பு கோடுகள் அமைந்திருக்கும் இடத்தில் சற்றே சூடாக இருக்கும்.

வீக்கம்!
ஆழமான இரத்த உறைவுஉண்டாகியிருந்தால், கை, கால்களில் வீக்கம் தென்படும். இது இரத்த ஓட்டத்தை சீர்குலைய செய்யும். இது முக்கியமான உடல் பாகங்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதை தடுக்கும்.



Click it and Unblock the Notifications











