Latest Updates
-
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
உடலில் இரத்த கட்டி உண்டாகி இருப்பதை வெளிக்காட்டும் 6 அறிகுறிகள்!
இந்த 8 அறிகுறிகளை வைத்து உங்கள் உடலில் இரத்த கட்டிகள் உண்டாகியிருப்பதை கண்டறிய முடியும்.
உடலின் வெளிப்புறத்தில் உண்டாகும் மாற்றங்களை நாம் கண்டறிய முடியும். ஆனால், உட்புற உடலில் உண்டாகும் மாற்றங்களை கண்டறிவது கடினம். நமது உடல் எந்த ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்தாலும், அதை ஒருசில அறிகுறிகள் மூலம் நமக்கு தெரிவிக்க முயலும்.

அந்த வகையில் உடலில் இரத்த கட்டிகள் உண்டாகியிருந்தால், நமது உடலில் தென்படும் அறிகுறிகள் பற்றி இனிக் காணலாம்...

கால் வலி!
கால் வலி அல்லது மென்மையான வீக்கம் போல உண்டாவது. இது ஆழமான இரத்த உறைவு உண்டாகியிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறி ஆகும். சில சமயங்களில் இதனால் தசை பிடிப்பு போன்று கூட ஏற்படலாம்.

இருமல்!
கால நிலை மாற்றம் போன்ற எந்த காரணமும் இன்றி இருமல் வந்துக் கொண்டே இருப்பதும் ஒரு அறிகுறி தான். இதய படபடப்பு, மார்பு வலி, மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

மூச்சு திணறல்!
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், நுரையீரலில் இரத்த கட்டிகள் உண்டாகியிருக்கலாம். இது உண்டாகியிருந்தால், இதய படபடப்பு, மயக்கம், அதிகரிக்கும் இதய துடிப்பு போன்றவை ஏற்படும்.

மார்பு வலி!
இழுத்து, ஆழமான மூச்சு விடும் போது இதய வலி உண்டாவது. இதுவும், நுரையீரலில் இரத்த கட்டி உண்டாவதன் அறிகுறி தான். இது அபாயமான நிலை அடைவதற்கு முன்னர் நீங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

சருமத்தில் சிவப்பு கோடுகள்!
இரத்த கட்டிகள் உண்டாகியிருந்தால், இரத்த நாளத்தின் பாதை வெளிப்புறத்தில் சிவப்பு கோடுகள் தோன்றும். இது சாதாரண காயம் அல்ல இதை நீங்கள் பரிசோதிக்க வேண்டும். கை, கால்கள் இந்த சிவப்பு கோடுகள் அமைந்திருக்கும் இடத்தில் சற்றே சூடாக இருக்கும்.

வீக்கம்!
ஆழமான இரத்த உறைவுஉண்டாகியிருந்தால், கை, கால்களில் வீக்கம் தென்படும். இது இரத்த ஓட்டத்தை சீர்குலைய செய்யும். இது முக்கியமான உடல் பாகங்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதை தடுக்கும்.



Click it and Unblock the Notifications