Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஓயாத இருமலை நிரந்தரமாக விரட்ட நினைக்கிறீர்களா? இந்த பாட்டி வைத்தியம் கை கொடுக்கும் !!
இருமல் தொற்று மற்றும் அலர்ஜியினால் வருவது. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இருமலை குணப்படுத்த இந்த இயற்கை வைத்தியம் பலனளிக்கும்
நுரையீரலில் கிருமிகளின் தொற்று , மாசுபட்ட காற்று, தூசு ஆகியவை தாக்கும்போது, எதிர்ப்பை காட்டும் விதமாக நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அலர்ஜியை உண்டாக்குவதே இருமல்.

காய்ச்சல், நுரையீரல் அலர்ஜி, நிமோனியா, காச நோய் ஆஸ்துமா ஆகியவற்றால் இருமல் உண்டாகும். குழந்தைகளுக்கு எளிதில் நுரையீரல் தொற்று உண்டாகும்.

இருமலுக்கு காரணம்
மூக்கின் வழியாக கிருமிகளின் தாக்கம் உருவாகும்போது அவை தொண்டைக்கும் பரவும். அங்கே மூச்சுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு இருமலை உண்டாக்குகிறது.
இந்த இருமல் இருவகையில் வரும். கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி உருவாகி அதனால் உண்டாகும். அதனை சரியாக கவனிக்காத போது நுரையீரலுக்கும் பரவி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
இன்னொரு வகை அலர்ஜியினால் உண்டாவது. தூசு, ரசாயனம் மற்றும் பல வித காரணங்களால் அலர்ஜி ஓயாத வறட்டு இருமலை தரும்.

இயற்கை வைத்தியம்.
இருமல் உடனடியாக நிற்க மாய மந்திரம் என்று எதுவுமில்லை. உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி பலப்பட்டு கிருமிகளை அழிக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனால் உடனடியாக நிற்க வேண்டுமென ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் அதிக காலம் எடுத்துக் கொள்ள வேண்டியது வரும். இதனால் பக்க விளைவுகள் உண்டாகலாம்.
இருமலை நிரந்தரமாக குணப்படுத்த நமது இந்திய பாரம்பரியத்தில் பலவகை வைத்தியங்கள் செய்யபப்டுகிறது. அதில் ஒன்றுதான் இந்த சிகிச்சை செய்து பாருங்கள். பலனளிக்கும்.

தேவையானவை :
பால்- 1 டம்ளர்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு - 1

செய்முறை :
பாலை சூடுபடுத்துங்கள். நன்றாக பொங்கும்போது முட்டையின் மஞ்சள் கருவை போடவும். சில நிமிடங்களுக்கு கலக்கவும். பின்னர் அடுப்பை அணைத்திடுங்கள்.

பருகும் முறை :
பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் தேன் கலந்து பருகுங்கள். தினமும் இரவு உணவு முடிந்ததும் இந்த பாலை குடிக்க வேண்டும்..
உங்களுக்கு விரைவில் பலனளிக்கும். முயன்று பாருங்கள்.



Click it and Unblock the Notifications