Latest Updates
-
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
ஓயாத இருமலை நிரந்தரமாக விரட்ட நினைக்கிறீர்களா? இந்த பாட்டி வைத்தியம் கை கொடுக்கும் !!
இருமல் தொற்று மற்றும் அலர்ஜியினால் வருவது. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இருமலை குணப்படுத்த இந்த இயற்கை வைத்தியம் பலனளிக்கும்
நுரையீரலில் கிருமிகளின் தொற்று , மாசுபட்ட காற்று, தூசு ஆகியவை தாக்கும்போது, எதிர்ப்பை காட்டும் விதமாக நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அலர்ஜியை உண்டாக்குவதே இருமல்.

காய்ச்சல், நுரையீரல் அலர்ஜி, நிமோனியா, காச நோய் ஆஸ்துமா ஆகியவற்றால் இருமல் உண்டாகும். குழந்தைகளுக்கு எளிதில் நுரையீரல் தொற்று உண்டாகும்.

இருமலுக்கு காரணம்
மூக்கின் வழியாக கிருமிகளின் தாக்கம் உருவாகும்போது அவை தொண்டைக்கும் பரவும். அங்கே மூச்சுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு இருமலை உண்டாக்குகிறது.
இந்த இருமல் இருவகையில் வரும். கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி உருவாகி அதனால் உண்டாகும். அதனை சரியாக கவனிக்காத போது நுரையீரலுக்கும் பரவி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
இன்னொரு வகை அலர்ஜியினால் உண்டாவது. தூசு, ரசாயனம் மற்றும் பல வித காரணங்களால் அலர்ஜி ஓயாத வறட்டு இருமலை தரும்.

இயற்கை வைத்தியம்.
இருமல் உடனடியாக நிற்க மாய மந்திரம் என்று எதுவுமில்லை. உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி பலப்பட்டு கிருமிகளை அழிக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனால் உடனடியாக நிற்க வேண்டுமென ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் அதிக காலம் எடுத்துக் கொள்ள வேண்டியது வரும். இதனால் பக்க விளைவுகள் உண்டாகலாம்.
இருமலை நிரந்தரமாக குணப்படுத்த நமது இந்திய பாரம்பரியத்தில் பலவகை வைத்தியங்கள் செய்யபப்டுகிறது. அதில் ஒன்றுதான் இந்த சிகிச்சை செய்து பாருங்கள். பலனளிக்கும்.

தேவையானவை :
பால்- 1 டம்ளர்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு - 1

செய்முறை :
பாலை சூடுபடுத்துங்கள். நன்றாக பொங்கும்போது முட்டையின் மஞ்சள் கருவை போடவும். சில நிமிடங்களுக்கு கலக்கவும். பின்னர் அடுப்பை அணைத்திடுங்கள்.

பருகும் முறை :
பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் தேன் கலந்து பருகுங்கள். தினமும் இரவு உணவு முடிந்ததும் இந்த பாலை குடிக்க வேண்டும்..
உங்களுக்கு விரைவில் பலனளிக்கும். முயன்று பாருங்கள்.



Click it and Unblock the Notifications