Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
தினமும் நாம் சமைக்க பயன்படுத்தும் அரிசியில் பிளாஸ்டிக் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது?
உலகில் சீனாவில் அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஒரு வருடத்தில் சுமார் 200 மில்லியன் டன் அரிசி அறுவடை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, இங்கு அறுவடை செய்யப்படும் அரிசி உலகின் பல பகுதிகளுக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது.

Image Courtesy: justnaturallife
சீன பொருட்கள் என்றாலே தரமற்றது என்ற எண்ணம் பலரது மனதில் உள்ளது. இதற்கு அங்கு போலிப் பொருட்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான். குறிப்பாக சீனாவில் உணவுப் பொருட்கள் கூட போலியாக தயாரிக்கப்பட்டு, பல நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
அதில், பிளாஸ்டிக் அரிசி, முட்டைக்கோஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, இப்போது அரிசியில் இருக்கும் பிளாஸ்டிக்கை எப்படி கண்டறிவது என்று காண்போம்.

தண்ணீர் சோதனை
1 டேபிள் ஸ்பூன் அரிசியை குளிர்ந்த நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைக்கும் போது அரிசி பாத்திரத்தின் அடியில் சென்றால், அந்த அரிசி நல்ல அரிசி. அதுவே மேலே மிதந்து கொண்டிருந்தால், அந்த அரிசி பிளாஸ்டிக் அரிசி. எனவே சமைக்கும் முன் அரிசியை ஊற வைத்து, பின்பு பயன்படுத்துங்கள்.

நெருப்பு சோதனை
முதலில் நெருப்பை மூட்டி, வாங்கிய அரிசியில் சிறிதை நெருப்பில் போடுங்கள். அப்போது அரிசி எரிந்து, பிளாஸ்டிக் நாற்றம் வீசினால், அந்த அரிசி பிளாஸ்டிக் அரிசியாகும்.

அம்மிக் கல் சோதனை
அம்மிக்கல்லில் சிறிது அரிசியை போட்டு, அதனை அரைக்க வேண்டும். அப்போது அது நன்கு பொடியாகி, வெள்ளை நிறத்தில் பவுடரானால், அது நல்ல அரிசி. செயற்கை அரிசியாக இருந்தால், அது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பூஞ்சை சோதனை
உங்கள் வீட்டில் உள்ள அரிசி நல்ல அரிசியா அல்லது செயற்கை அரிசியா என்பதை பூஞ்சை சோதனையின் மூலம் அறியலாம். அதற்கு வீட்டில் உள்ள அரிசியை சமைத்து, பின் அதில் சிறிதை ஒரு பாத்திரத்தில் போட்டு தட்டு கொண்டு மூடி, வெதுவெதுப்பான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்து இரண்டு நாட்கள் கழித்து, பார்க்கும் போது, சாதத்தில் பூஞ்சை இருந்தால், அது நல்ல அரிசி சாதம். போலி அரிசியாக இருந்தால், அதில் பூஞ்சை வராது.



Click it and Unblock the Notifications