Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
கோடையில் பிடிக்கும் ஜலதோஷத்தில் இருந்து விடுபட சில டிப்ஸ்...
உங்களுக்கு வெயில் காலத்தில் திடீரென்று மூக்கு ஒழுகுகிறதா மற்றும் மூக்கடைப்பு ஏற்படுகிறதா? அப்படியெனில் இது கோடைக்கால ஜலதோஷம். திடீரென்று காலநிலை மாறியதால், உடலின் வெப்பநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி குறைந்து அதனால் சளி, இருமல் போன்றவற்றை உண்டாக்கும்.
இதனைத் தடுக்க கோடையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். குறிப்பா வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, கோடைக்கால நோய்த்தொற்றுகளில் இருந்து விலகி இருக்கலாம்.
இங்கு கோடையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இளநீர்
இளநீர் உடலுக்கு குளிர்ச்சியானது. குறிப்பாக கோடையில் இதனை பருகுவது என்பது மிகவும் நல்லது. அதுவும் தினமும் 2 இளநீர் பருகி வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோடையில் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுதலைத் தரும்.

ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்
ரோஸ் வாட்டரை தினமும் இருமுறை எடுத்து வந்தால், உடலின் அதிகப்படியான வெப்பம் குறையும். அதிலும் ரோஸ் வாட்டருடன் தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகினால், உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

பழச்சாறுகள்
பழச்சாறுகளை கோடையில் அதிகம் பருக வேண்டும். இது வைரஸ் தாக்குதல்களைத் தடுக்கும். அதிலும் வைட்டமின் சி நிறைந்த பழங்களான அன்னாசி, ஆரஞ்சு, தர்பூசணி போன்றவைகளை ஜூஸ் போட்டு பருகி வாருங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும், நோய்களும் வராமல் இருக்கும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்கும் போது, உடலின் வலிமை அதிகரிப்பதோடு, நார்ச்சத்து உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகளான தானியங்கள் மற்றும் கைக்குத்தல் அரிசி போன்றவை எளிதில் செரிமானமாகும்.

க்ரீன் டீ
கோடையில் உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட, 2 கப் க்ரீன் டீ பருகவும். இதனால் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கும். வேண்டுமானால் க்ரீன் டீயுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பருகுங்கள். இதனால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வைட்டமின் ஏ உணவுகள்
வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருட்களான குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ், மீன், முட்டை போன்றவற்றை கோடையில் அதிகம் உட்கொண்டு வந்தால், உடலைத் தாக்கிய நோய்க்கிருமிகள் அழிக்கப்படும். மேலும் இந்த உணவுகளை உட்கொள்ளும் போது, குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பச்சை இலைக் காய்கறிகள்
கோடையில் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி அதிகரிக்கும். எனவே பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கேல் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலும் சுத்தமாகும்.



Click it and Unblock the Notifications