Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பழங்களை இப்படி சாப்பிட்டால் உங்களுக்கு நல்லதுக்கு பதிலாக கெட்டதுதான் நடக்குமாம்... இனிமே இப்படி பண்ணாதீங்க!
ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வதற்கு பழங்கள் இன்றியமையாத ஒன்றாகும். குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், எடை இழப்புக்கு பழங்கள் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. அவை இயற்கை நமக்கு வழங்கியுள்ள விரைவான சிற்றுண்டியாகும்.
ஆரோக்கியமான உணவை பராமரிக்க உதவும் வைட்டமின்கள் மற்றும் பிற கூறுகளின் சிறந்த மூலமாக பழங்கள் உள்ளது. பழங்களில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. பொதுவாக அவை பச்சையாகவோ அல்லது சாறு வடிவிலோ உட்கொள்ளப்படுகின்றன.

பழங்கள் இயற்கையான உணவு மட்டுமல்ல, உடல் செயல்படத் தேவையான சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இருப்பினும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், பழங்களின் சில முக்கிய நன்மைகளை நாம் இழக்க நேரிடும். அவற்றின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, நாம் அவற்றை சரியாக சாப்பிட வேண்டியது முக்கியம்.
தவறான பொருட்களுடன் பழங்களை சாப்பிடுவது
மற்ற திட உணவுகளை விட பழங்கள் நம் உடலால் விரைவில் உடைக்கப்படும். பழங்களை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது, அமா எனப்படும் நச்சுகள் உடலில் உருவாகும். உணவு இணைத்தல் செரிமானத்தை மெதுவாக்கும் என்பதே இதற்குக் காரணம்.
கனமான உணவு ஜீரணிக்க எடுத்துக் கொள்ளும் காலம் வரை பழங்களும் வயிற்றில் இருக்க வேண்டும், இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்குகிறது. இது செரிமான சாறுகளில் நொதிக்கத் தொடங்குகிறது, இது பொதுவாக நச்சுத்தன்மையுடையது மற்றும் பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். எனவே பழத்தை எப்போதும் தனியாக சாப்பிடுவது நல்லது.
இரவில் பழங்களை சாப்பிடுவது
இரவு தூங்க செல்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் எந்தவித உணவையும் தவிர்ப்பது நல்லது, குறிப்பாக பழங்களை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது செரிமான அமைப்பில் தலையிடுகிறது. படுக்கைக்கு செல்வதற்கு முன் பழங்களை உட்கொள்வது தூக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் அது நிறைய சர்க்கரையை வெளியிடுகிறது, இது உடல் ஓய்வெடுக்கும் போது ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
பழங்களை இரவில் சாப்பிடுவதால், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் கணிசமாகக் குறைக்கப்படுகிறது. கூடுதலாக, பழங்களை இரவில் தாமதமாக சாப்பிடுவது அமிலத்தன்மை அறிகுறிகளை ஏற்படுத்தும். பழங்களை மாலை நேர சிற்றுண்டியாக உட்கொள்ள வேண்டும், அதற்குப் பிறகு உட்கொள்ளக்கூடாது.
பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது
குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும், பழங்களைச் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தின் pH அளவு சமநிலையற்றதாக மாறும்.
குறிப்பாக தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கவே கூடாது. ஏனென்றால், நிறைய தண்ணீர் உள்ள பழங்கள் உங்கள் வயிற்றின் அமிலத்தன்மையைக் குறைப்பதன் மூலம் pH சமநிலையை மாற்றும். அவ்வாறு செய்வதால் வயிற்றுப்போக்கு அல்லது வயிறு அசௌகரியம் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பழத்தின் தோலை தூக்கியெறிவது
வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் என்று வரும்போது, பழங்களின் தோல் அதில் முக்கியமானவை. உதாரணமாக, ஆப்பிள் தோல்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. தோலை உண்பது உடல் பருமன் மற்றும் புற்றுநோய்க்கான உங்கள் ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
பழங்களில் உப்பு சேர்ப்பது
பழங்களில் உப்பு அல்லது சாட் மசாலாவை தூவுவது, அதன் சுவையை அதிகரிக்கும். ஆனால் உப்பைத் தூவியபிறகு, பழங்கள் எவ்வாறு தண்ணீரை வெளியிடுகின்றன என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அந்த நீர் ஊட்டச்சத்து இழப்பையும் குறிக்கிறது. மேலும், உப்பு மற்றும் சாட் மசாலாவில் உள்ள சோடியம் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல, ஏனெனில் அவை நம் உடலில் நீர் தேங்கி நிற்கும். எனவே உங்கள் பழங்களை உப்பு அல்லது சாட் மசாலா சேர்க்காமல் பச்சையாக சாப்பிடுங்கள்.
பழங்களை வெட்டிய பின் கழுவுவது
பழங்களை வெட்டிய பின் கழுவுவது நல்ல யோசனையல்ல. பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு அவற்றைக் கழுவுவது அவசியம். பழங்களை வெட்டிய பின் கழுவினால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெளியேறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













