Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
உலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...
செப்சிஸ் என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது, அதற்கான வீட்டு வைத்திய முறைகள் என்ன என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
செப்சிஸ் என்ற பெயரையே நீங்கள் இப்போது தான் கேட்கிறீங்களா? இது நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை தான். பெயர் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் இது எப்போதிருந்து இந்த நோய் இருக்கிறது என்று தெரிஞ்சா ரொம்ப ஷாக் ஆகிடுவீங்க. சரி வாங்க. அது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நம்முடைய ரத்தத்தில் சில பாக்டீரியாக்கள் தாக்குதலை ஏற்படுத்தி நம்முடைய உடலை முழுவதுமாக பலவீனப்படுத்தி விடும். அத்தகைய கொடுமையான நோய்க்குறிக்குப் பெயர் தான் செப்சிஸ்.

செப்சிஸ் என்றால் என்ன?
நம்முடைய உடலில் உண்டாகின்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் நம்முடைய உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி குறைவது தான். சரி அந்த நோயெதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வெறுமனே ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுமட்டுமே உண்மையான காரணமல்ல. நம்முடைய ரத்தத்தில் சில பாக்டீரியாக்கள் தாக்குதலை ஏற்படுத்தி நம்முடைய உடலை முழுவதுமாக பலவீனப்படுத்தி விடும். அத்தகைய கொடுமையான நோய்க்குறிக்குப் பெயர் தான் செப்சிஸ்.

வரலாறு
செப்சிஸ் என்பது இன்றைக்கு நேற்றைக்கு ஏதோ புதிதாக முளைத்திருக்கிற பிரச்சினை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்க்குறியை முதன்முதலாக, 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தான் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த செப்சிஸ் என்னும் சொல்லானது கிரேக்கத்தில் இருந்து விலங்குகளின் சிதைவால் ஏற்பட்டது என்ற பொருளில் இருந்து வருவிக்கப்பட்டுள்ளது.
கி.மு 400க்கு முன்பாகவே ஹிப்போகிரேட்டஸ் இந்த செப்சிஸ் என்னும் நோய்க்குறியின் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்.
கடந்த 2500 ஆண்டுகளாகவே இந்த சொல் புழக்கத்தில் இருந்து வருகிறது. பல நாடுகளில் இந்த சொல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

செப்சிஸ் என்பது என்ன?
செப்சிஸ் எனப்படும் செப்டிசீமியா என்பது ரத்தத்தில் கலக்கும் பாக்டீரியா கிருமி தொற்றாகும். பாக்டீரியா தொற்றுக்கள் பல வகையுண்டு. இதில் மிகவும் ஆபத்தான ஒன்று தான் செப்சிஸ் எனப்படும் செப்டிசீமியா என்பதாகும். இந்த பாக்டீரியா சாதாரணமாக உடலில் இருப்பதை விடவும் ரத்தத்தில் கலக்கும் போது அது அதிகமாகப் பெருகிக் கொண்டே போகும்.

அறிகுறிகள்
செப்சிஸ் பாக்டீரியா உடலில் சென்று ரத்தத்தில் கலந்து பெருகிக் கொண்டே போகும்போது, உடலில் வீக்கம் ஏற்பட்டு, உடலின் சராசரி ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே போகும்.
செப்சிஸ் என்னும் செப்டிசீமியா சிறுநீரகப் பாதை மற்றும் நுரையீரல் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக அளவில் காய்ச்சல் ஏற்படும்.

சிகிச்சை முறைகள்
இந்த பாக்டீரியாவின் தாக்கத்தைக் குறைக்க வேண்டுமானால் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
இந்த பாக்டீரியாவின் மூலமாக ஏற்படுகின்ற ரத்த அழுத்தக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு திரவ வடிவில் மருந்துகள் செலுத்தி, கையில் ஊசி மூலம் செலுத்தப்படும்.
இந்த பாக்டீரியாத் தாக்கத்தால் மூச்சுத் திணறல் கூடு ஏற்படும். அந்த மூச்சுத்திணறலை சரிசெய்ய வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். இந்த பாக்டீரியா தாக்கத்தின் தொடக்க கால அறிகுறியே கட்டுப்படுத்த முடியாத அளவு காய்ச்சல் ஏற்படுவது தான்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கூட இந்த செப்சிஸ் பாக்டீரியா ரத்தத்தில் பரவியதால் தான் உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றதாக மருத்துவர்கள் குறிப்பட்டு இருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications