Just In
- 8 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 25 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
Don't Miss
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
எச்சரிக்கை..! இதையெல்லாம் செய்தால், சீக்கிரமாகவே உங்களுக்கு வயதாகி விடுமாம்...!
ஒவ்வொரு நாட்டினரின் பருவ நிலைகளும் பலவிதத்தில் மாறுபட்டு இருக்கும். இயற்கையின் படைப்பே இப்படித்தான். கால நிலைக்கு ஏற்ப தான் நமது உடல் நலமும் மாறுபடும். கால நிலையின் தன்மைக்கு ஏற்ப நமக்கு பல்வேறு தாக்குதலும் ஏற்பட கூடும். அந்த வகையில் மற்ற கால நிலைகளை காட்டிலும் பனி காலத்தில் தான் நமக்கு அதிகம் வயதாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கொஞ்சம் அதிர்ச்சி தர கூடிய தகவல் தான், என்றாலும் இது உண்மையும் கூட. பொதுவாகவே நமக்கெல்லாம் அதிகம் பிடித்தது பனிக்காலம் தான். ஆனால், இந்த பனிக்காலத்தில் தான் பலவித மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுமாம். நமது வயது வேகமாக கூடுவதோடு, இளமையை கொஞ்சம் கொஞ்சமாக பனிக்காலத்தில் நாம் இழக்கின்றோம். வாங்க, இது எப்படி சாத்தியம் ஆகும் என்பதை தெரிந்து கொள்வோம்.
முன்பனியே..!
"ப்ப்பா.. என்னா வெயிலு" அப்படினு கடுகடுக்கும் நம்மை இதமாக தடவி கொடுப்பதே இந்த பனிக்காலம் தான். சின்ன வயதில் இருந்தே நம் எல்லோருக்கும் பனிக்காலம் என்பது சிறப்புமிக்க ஒன்றாகும். பலருக்கு காஷ்மீரை போன்று பனி துளி மழை வர வேண்டும் என்கிற கனவும் பல நாட்களாக இருந்திருக்கும். இத்தகைய பனிக்காலம் நமது வயதை கூட்டினால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.
ஒவ்வொன்றிற்கும் வேறு..!
பொதுவாக நாம் ஒரே விதமான உணவு பழக்கத்தையே எல்லா காலநிலைகளிலும் கடைபிடித்து வருகின்றோம். இது மிகவும் தவறான ஒன்றாம். வெயில் காலத்திற்கேற்ற உணவுகளையும், பனி காலத்திற்கேற்ற உணவுகளையும் நாம் உண்ண வேண்டும். இல்லையெனில் அவை நமது உடல் வளர்ச்சியில் பலவித மாற்றங்களை கொண்டு வந்து விடும்.
பனியில் சுடு தண்ணீயா..?
நம்மில் பலர்பனி காலங்களில் சுடு தண்ணீரில் குளிப்பது வழக்கமாகும். ஆனால், இது மோசமான விளைவுகளை நமக்கு ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கிறது. சுடு தண்ணீரில் குளித்தால் தோல் விரைவிலே வறண்டு, வெடிப்பு, வறட்சி போன்றவை ஏற்படும். பிறகு, இதுவே உங்களை வயதானவரை போன்று காட்டும்.
இவர்தான் முக்கியம்..!
பொதுவாகவே பனிக்காலத்தில் சூரியனின் வருகை மிக குறைவே. இது போன்ற காலங்களில் நமக்கு வைட்டமின் ட மற்றும் வைட்டமின் கே கிடைப்பது மிக கடினம். இவை நமது சருமத்தை வெளிர்ந்து இருப்பதை போன்று மாற்றி விடும். அத்துடன் அதிக சோர்வையும் தரும்.
MOST READ: சீன ராஜாக்கள் இந்த பழத்த ராணிகளுக்கு பரிசா கொடுப்பாங்களாம்..! ஏன்னு தெரியுமா..?
இதெல்லாம் நல்லதல்ல..!
பனிக்காலத்தில் ஒரு சில உணவுகளை நாம் சாப்பிட்டால் அவை சீக்கிரமாகவே நமக்கு வயதானவரை போன்ற தோற்றத்தை தரும். குறிப்பாக பால் பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள், உப்பு அதிகம் சேர்த்தவை, வறுத்த உணவுகள் ஆகியவற்றை நாம் அதிகம் சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் பனி காலங்கள் நமக்கு மோசமானதாக மாறி விடும்.
எத்தனை முறை..?
பனிக்காலங்களில் நமது தோலில் உட்புறம் அதிக வறட்சியாக இருக்கும். இதனை மேலும் உயர்த்தும் படி நாம் அடிக்கடி முகத்தை கழுவினால் நமது முகம் பலவித பாதிப்புகளை சந்திக்க நேரிடும். கூடுதலாக வயதானவரை போன்ற தோற்றத்தையும் இது தரும். எனவே, ஒரு நாளைக்கு 1 முறை முகத்தை கழுவினால் போதுமானது.
மன அழுத்தம் அதிகம்..!
பொதுவாகவே இந்த பனிக்காலத்தில் உங்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றமும் உங்கள் வயதை விரைவாக ஆக்க கூடும். இளமையாக இருக்கும் உங்களின் சருமம் விரைவிலே வயோதிக பருவத்தை எட்டிவிடும். மன அழுத்தம் அதிகமானால் ஹார்மோன்கள் பிரச்சினைஉருவாகி பலவித கெட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்.
வயதான தோற்றம்..!
முகத்தில் உள்ள உட்புற சருமம் அதிகமாக வறண்டு போனால், மிக சீக்கிரமாகவே நமது சருமம் இளமையை இழந்து விடும். இந்த நிலை பெரும்பாலும் பனிக்காலத்தில் ஏற்பட கூடும். பனிக்காலத்தில் சருமம் வறண்டு போவதோடு மிக விரைவிலே இளமையை இழந்து விடும்.
MOST
READ:
ஜப்பானியர்கள்
இப்படி
தொப்பையே
இல்லாமல்
ஒல்லியாகவும்,
அதிக
ஆயுளுடன்
இருக்க
காரணம்
என்ன..?
என்ன செய்யலாம்..?
பனிக்காலத்தில் வயதாகாமல் இருக்க, மேற்சொன்னவற்றை கவனத்தில் கொள்ளுங்கள். சருமத்தை எப்போதும் ஈர்ப்பத்துடனே வைக்க லோஷன்களை பயன்படுத்தலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
இதுவும் முக்கியம்..!
இந்த பனிக்காலங்களில் நாம் நிச்சயம் உடற்பயிற்சிகளை தவிர்த்து விட கூடாது. சீரான உணவு முறை மற்றும் ஆரோக்கியமான உடற்பயிற்சிகள் தான் வயதாவதை இது போன்ற காலங்களில் தடுக்கும். இதனால் உங்களின் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
எனவே, மேற்சொன்ன குறிப்புகளை நினைவில் வைத்து கொண்டு, இளமையாக இருங்கள். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.