Just In
- 28 min ago இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- 1 hr ago காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- 2 hrs ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
Don't Miss
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Movies சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மழைக்காலத்தில் கால்ல பூஞ்சைதொற்று வருதா?... இந்த 4 மட்டும் பண்ணுங்க...
மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நமது சருமமும் எப்பொழுதும் ஈரப்பதத்துடனே காணப்படும். இதனால் எளிதாக பூஞ்சை தொற்று ஏற்பட்டு அவதி ஏற்படும். எனவே இதை தடுக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன
இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதமும் நம்மைச் சூழ்ந்துள்ள தண்ணீரின் மூலமாகவும் எளிதாக பூஞ்சை தொற்று நம்மை தொற்றிக் கொள்ளும். இந்த பூஞ்சை தொற்றால் வலி, தோல் உரிவு, காலில் அசெளகரியம் போன்ற பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பூஞ்சை தொற்றை சில எளிய இயற்கை முறைகளைக் கொண்டே தீர்வு காணலாம். அதைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
குளிர்ந்த ஒத்தடம்
உங்கள் பாதங்களில் சரும வடுக்கள், கொப்புளங்கள் போன்றவை தென்பட்டால் அதற்கு குளிர்ந்த ஒத்தடம் இதமாக இருக்கும். இதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே செய்து கொள்ளவும் முடியும். ஒரு பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு அதை சுற்றி ஒரு துணியை குளிர்ந்த நீரில் நனைத்து கட்டிக் கொள்ளுங்கள். 10-15 நிமிட இடைவெளியில் பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக ஒத்தடம் கொடுக்கவும். ரெம்ப நேரம் அதே இடத்தில் வைத்திருக்க வேண்டாம். இல்லையென்றால் ஒரு வித நமநமப்பு ஏற்படும்.
வேப்பிலை
வேப்பிலை யில் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. வேப்பிலை சரும பிரச்சினைகளை போக்க வல்லது. சரும வடுக்களையும் எளிதில் குணப்படுத்துகிறது.
பயன்படுத்தும் முறை
ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து நீரில் போட்டு நன்றாக 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இப்பொழுது இதை ஒரு பக்கெட்டில் ஊற்றி அந்த நீரில் குளிக்கவும். சரும பிரச்சினைகள் அனைத்தையும் விரட்டி விடும். இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் சருமத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றி விடும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையும் சருமத்திற்ககான சிறந்த நண்பன் எனலாம். பூஞ்சை அழற்சி மற்றும் சரும வடுக்களை போக்குவதில் சிறந்தது.
பயன்படுத்தும் முறை
எனவே பாதிக்கப்பட்ட சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவி அரை மணி நேரம் வைத்திருங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரும் நிறைய சரும பிரச்சினைகள் மற்றும் அழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
பயன்படுத்தும் முறை
ஆப்பிள் சீடர் வினிகரை சிறிதளவு தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பஞ்சில் நனைத்து தடவ வேண்டும். இதிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி செப்டிக், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி பூஞ்சை பொருட்கள் சரும வடுக்களை சரி செய்கிறது.
என்னங்க இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி மழைக்காலத்திலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம். பின்ன என்ன இனி மழையில் ஒரே ஆட்டம் பாட்டம் தான்.