Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
உயிர் போகும் அபாயம்!! வெளியிடங்களில் சாப்பிடுவர்களே உஷார்
உயிர் போகும் அபாயம்!! வெளியிடங்களில் சாப்பிடுவர்களே உஷார்
உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது கல்லீரல். உலக கல்லீரல் தினமான இன்று அதனைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் கல்லீரலில் தான் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும், ஜீரணத்திற்கு உதவிடும் என்பதால் கல்லீரல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது.

மனிதர்களின் இறப்பிற்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது இந்த கல்லீரல் நோய்கள் தான். இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

காரணம் :
மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்றவற்றால் கல்லீரல் பாதிக்கப்படும். சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே, என்சைம் கோளாறுகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
வெளியிடங்களில் சாப்பிடுவோர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதே போல கண்ட இடங்களிலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

தாமதம் :
எந்த ஒரு உடல் உறுப்பிலும் பாதிப்பு என்றால், உடனே அது வெளிப்பட்டுவிடும்.ஆனால், கல்லீரல் அப்படியல்ல அறிகுறிகள் தாமதமாகத்தான் தெரியும். கல்லீரல் பாதிக்கப்படும் நிலையை ஹெபடைட்டிஸ் எனப்படும். அவற்றில் ஏ, பி, சி, டி, இ என்று பல வகைகள் உள்ளன.

பரவுதல் :
சுகாதாரமற்ற குடிநீர், உணவு போன்றவை மூலமாக ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் கிருமி பரவிடும். ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி ரத்தம் மூலமாகவும் உடலுறவு மூலமாகவும் பரவிடும்.

மது :
நாள் கணக்கில் வீரியமிக்க மாத்திரைகள் சாப்பிடுவது, மதுப்பழக்கம் போன்றவை கல்லீரலை பாதிக்கும். இதில் மோசமான நிலை என்று சொல்லப்படும் சிரோசிஸ் என்ற நோய் ஏற்பட முக்கிய காரணம் மது அருந்துதல்தான்.

அறிகுறிகள் :
வாய் துர்நாற்றம், கால்கள் வீங்கும், மஞ்சள் காமாலை வரும், வயிற்றின் வலது புறத்தில் வலி ஏற்படும், வயிறு உப்பசமாக இருக்கும், வாந்தி,காய்ச்சல்,மயக்கம் ஏற்படும் எப்போதும் சோர்வாகவே இருப்பர் சிலருக்கு மயக்கம் கூட ஏற்படக்கூடும்.

அறுவை சிகிச்சை :
கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால், மற்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்ட பின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது.
உடல் உறுப்பு தானம் செய்வோரிடம் இருந்து, இறந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் கல்லீரல் பெறலாம் அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து கல்லீரலின் 70 சதவீத பகுதி வரை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தலாம். இதனால், இருதரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாது.

தவிர்க்கலாம் :
மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.அதே நேரத்தில் சீரான உணவு முறை, உடற்பயிற்சி, உரிய ஓய்வு ஆகியவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.



Click it and Unblock the Notifications











