Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
காயங்களை விரைவில் ஆற்றும் ஸ்மார்ட் பேண்டேஜ்!!
புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட காயங்களை விரைவில் ஆற்றும் ஸ்மார்ட் பேண்டேஜைப் பற்றிய அறிமுகம் இந்த கட்டுரையில் காணலாம்.
நமது உடலில் சிறு காயங்கள் படும்போது, அதில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க நாம் பேண்டேஜ் பயன்படுத்துவோம். இதனால் விரைவில் காயம் குணமாகும்.
தற்போது நடத்தப்பட்டு வரும் ஒரு ஆராய்ச்சியில் ஸ்மார்ட் பேண்டேஜ் என்ற ஒரு புதிய பேண்டேஜை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது துரிதமான முறையில் காயங்களை ஆற்றுவதாக கூறப்படுகிறது. இதனை பற்றி இப்போது பார்க்கலாம்.
இந்த ஆய்வை நடத்துவது - யுனிவர்சிட்டி ஆப் நெப்ராஸ்கா - லிஙகன் , ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் . இவர்கள் வடிவமைத்த பாண்டேஜ் நாட்பட்ட காயங்கள் மற்றும் போர்க்களத்தில் ஏற்படும் காயங்களை முழுதும் குணப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பேண்டேஜ் , ஜெல் கொண்டு பூசப்பட்ட , மின்சாரம் கடத்தும் இழைகளால் உண்டாக்கப்பட்டவை. இவற்றில் தொற்றுக்களை நீக்கும் ஆன்டி-பையோட்டிக்கள் , திசுக்களை மறு உற்பத்தி செய்யும் கூறுகள், வலி நிவாரணிகள் மற்றும் மருந்துகள் தனித்தனியாக இடம்பெற்றுள்ளன.
அஞ்சலக ஸ்டாம்பை விட சிறிய அளவு மைக்ரோ கண்ட்ரோலர் ஒன்று இதில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் அல்லது வயர்லெஸ் சாதனம் வழியாக இந்த மைக்ரோ கண்ட்ரோலர், தேர்ந்தெடுக்கப்பட்ட இழைகள் மூலம் ஒரு சிறிய அளவு வோல்ட்டேஜை அனுப்புகிறது. இந்த வோல்ட்டேஜ் இழைகளையம் ஜெல்லையும் சூடாக்கி அவற்றில் உள்ள மருந்துகளை வெளியாக்குகிறது.
ஒரே பேண்டேஜில் ஒரு குறிப்பிட்ட காயத்திற்கான பல மருந்துகளை செலுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் மருந்து கொடுக்கப்பட வேண்டிய அளவு மற்றும் நேரத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனர்.
தனி தனி இழைகள் மூலம் செலுத்தப்படும் மருந்து மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் விதம் ஆகியவை இணைந்து காயத்தை விரைவில் குணப்படுத்துகிறது,
அளவு சார்ந்து மருந்து வெளியிடும் முதல் பேண்டேஜ் இது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு மருந்துகளை வெவ்வேறு வெளியேறும் தன்மை கொண்டு நீங்கள் உள்ளே செலுத்தலாம். இதுவே இந்த பேண்டேஜின் மிக பெரிய நன்மையாகும்.
இந்த கண்டுபிடிப்பு பயோ மெடிக்கல் எஞ்சினீயரிங் மற்றும் மருத்துவ துறையின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு ஒரு அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
போரில், புல்லட் தாக்கப்பட்டு ஏற்படும் காயம், அல்லது கூர்மையான ஆயுதத்தால் ஏற்படும் காயம் என்று எந்த ஒரு காயத்தையும் குணப்படுத்தும் செயலாக்கம் இந்த பேண்டேஜிக்கு உண்டு. உடலில் தொற்று ஏற்படுவதையும் இது தடுக்கிறது.
இவற்றில் உள்ள சாதகங்களை என்னதான் ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் இது இன்னும் பல கட்ட சோதனைகளை கடக்க வேண்டும். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு, நேர்மறை முடிவுகள் வெளியான பின்புதான் சந்தைகளில் கிடைக்க தொடங்கும். இதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும்.
இதற்கிடையில் இந்த பேண்ட்ஜில், நூல் சார்ந்த சென்சார்கள் மூலம் க்ளுகோஸ், pH மற்றும் சரும ஆரோக்கியம் சம்மந்தமான குறியீடுகளை பரிசோதிக்கவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது ஒரு நல்ல செய்தியாகும். இவற்றையும் இந்த பேண்டேஜில் இணைப்பதன் மூலம் பல விதமான சிகிச்சைகளை தனிச்சையாக கொடுக்க இயலும்.
வாழ்க விஞ்ஞானம் ! வளர்க இன்னும் பல நல்ல கண்டுபிடிப்புகள்!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

