Latest Updates
-
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்!
அயோடைஸ்டு உப்பு சாதரணமானவர்களும் எடுத்துக் கொள்ளலாமா?
உப்பு உடலுக்கு தேவைக்கு அளவே போதுமானது. ஆனால் உப்பை அதிகம் எடுத்துக் கொளவ்தை போல், அயோடைஸ்டு உப்பை எடுத்துக் கொள்வதாலும் உண்டாகும் தீமைகளைப் பற்றியது இக்கட்டுரை.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கும் 5 கிராம் உப்பை எடுத்துக் கொண்டால் போதுமானது என உலக சுகாதர நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் இந்தியர்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு 100 சதவீதம் அதிகம் என்று தகவலை அந்நிறுவனங்கள் கூறுகின்றன.
அதற்காக உப்பை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எலக்ட்ரோலைட் பேலன்ஸ் எனப்படும் நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக அவசியம். குறிப்பாக, உடலில் உப்பின் அளவு குறைவானால் மயக்கம் ஏற்படும்.எனவே, உணவில் அளவோடு உப்பை எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது . உப்பை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

உப்பு :
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது கடலிலிருந்து எடுக்கப்படும் தூய்மைப்படுத்தப்படாத, பதப்படுத்தப்படாத சாதா உப்பு. இதற்கு சோடியம் குளோரைடு என்று பெயர்.
இதில் உள்ள சோடியம் அயனியானது ரத்த ஓட்டத்தையும், ரத்த அழுத்தத்தையும் சமன் செய்யும். இவை சோடியம் குறைவாக இருக்கும்போது ஏற்படும் நன்மைதான். ஆனால், அதுவே அதிகமாகும்போது சிறுநீரக செயலிழப்பு போன்ற விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

அயோடைஸ்டு உப்பு எடுத்துக் கொள்வது நல்லதா?
அயோடின் குறைவாக இருப்பவர்கள் அயோடைஸ்டு உப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க கடலிலிருந்து பிரித்தெடுக்கபப்டும் உப்பை ரசாயான்ங்கள் கலந்து வெள்ளையாக்குகிறார்கள். இதனை ஆரோக்கியம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

அயோடைஸ்டு உப்பு புத்திக் கூர்மை தருமா?
அயோடைஸ்டு உப்பு எடுத்துக் கொண்டால் புத்திக் கூர்மை அதிகமாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. அயோடின் இயற்கையாக காய்கறிகளிலேயே இருக்கிறது. அவற்றை எடுத்துக் கொண்டால் போதுமானது

அயோடின் உப்பின் தீமைகள் :
அயோடின் குறைவாக இருப்பவர்களை தவிர்த்து சாதரணமாக மற்றவர்கள் எடுத்துக் கொண்டால் நன்மைகளை விட தீமைகள் அதிகம் உண்டாகும். இதனால் ஹைபர் தைராய்டு போன்ற ஆபத்தான நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

அயோடின் உப்பின் தீமைகள் :
அதோடு சாதரணமாகவே உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதால் அவை சிறுநீரகத்திற்கு அதிக வேலை கொடுக்கிறது. அதிலும் அயோடின் கலந்தவை இன்னும் சிறு நீரகத்தை பாதிக்கிறது.

கட்டுப்பு :
கட்டுப்பு என்பது உப்பில் பல்வேறு மூலிகை சாறுகளை கலந்து தயாரிக்கப்படுவது. இதனை மற்ற சாதா உப்புகளுக்கு பதிலாக எடுத்துக் கொண்டால் எந்தவித பாதிப்பை தராது.
ரத்தக் கொதிப்பை உண்டாக்காது. அவை சிறு நீரகம, வியர்வை போன்றவற்றால் வெளியேறுவதால் அவை சிறு நீரகத்திற்கு பாதகம் அளிக்காது.



Click it and Unblock the Notifications