Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ரோஸ் வுட் ஃபர்னிச்சர் பண்ண மட்டும்தானா? உடல் எடையை குறைக்கவும் செய்யும் தெரியுமா?
ஈடில்லா நன்மைகளைத் தரும் ரோஸ் வுட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!
நம் தேசத்தின் தட்ப நிலைக்கேற்ப பல வித மரங்கள் காடுகளில், மலைகளில் மற்றும் சமவெளிகளில் வளர்ந்து வருகின்றன. சில மரங்கள் எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியவை, அதில் ஒன்றுதான் நமது பாரம்பரிய மரமான, ஈட்டி மரம்.
பெயரே, அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகப் பலர் எண்ணினாலும், இந்த மரத்தின் வேறொரு பெயரைக் கேட்டால், அட, அந்த மரமா என்பார்கள். ஈட்டி மரம் என்று அழைக்கப்படும் மரத்துக்கு உள்ள மற்றொரு பெயர், தோதகத்தி, இன்னொரு பெயர், கருங்காலி. இப்போது ஓரளவு சிலருக்குத் தெரிந்திருக்கும், ஆனால், இந்தப் பெயர் பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கும், ரோஸ்வுட்.

நமது தேசத்தில் எல்லா மாநிலங்களிலும், இமய மலை உள்ளிட்ட பல்வேறு மலைகளிலும், கொல்லிமலை முதல் கிழக்கே உள்ள சிக்கிம் மாநிலத்தின் காடுகள் வரை, எங்கும் வளரும் இயல்புடையது, ஈட்டி மரம்.
இதன் வலுவான தன்மையால், இரும்புக்கு இணையான ஈட்டி மரம் என்பார்கள், தென்னகத்தின் பாரம்பரிய மரம், தோதகத்தி என்ற பழம்பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. சங்கத்தமிழ் காலத்தில் இருந்தே, தமிழன் வாழ்வில், அன்றாட உபயோகங்களில், கருவிகளில், சேர்ந்தே இருந்த ஒரு மரம், தோதகத்தி மரம்.
பொதுவாக, மழைவளமிக்க, ஈரமான நிலங்கள், ஆற்றங்கரையோரங்கள் மற்றும் அடர்ந்த காடுகளில் ஈட்டி மரங்கள் அதிகம் வளர்கின்றன.
தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மற்றும் சதுரகிரி போன்ற அடர்ந்த வனங்கள் கொண்ட மலைகளில், ஈட்டி மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
நூறடிக்கும் மேற்பட்ட உயரம் வரை வளரும் ஈட்டி மரங்களின் அடிமரம், கிட்டத்தட்ட இருபது அடி அகலம் இருக்குமென்றால், இந்த மரத்தின் பிரமாண்டத்தை நாம் உணர முடியும்.
ஆயினும், இந்த மரங்கள் அதிகபட்ச உயரத்தை அடைய மிக நீண்ட ஆண்டுகள் ஆகிவிடும், கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகாலம். ஓரளவு முட்கள் கொண்டு செம்மை கலந்த கருமை வண்ணத்தில் காணப்படும் ஈட்டி மரங்கள், பழங்காலங்களில், இவற்றின் உறுதித்தன்மைக்காக, கடல் வணிகம் மூலம் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகியது.

வயிற்றுப் புண் :
விலை மதிப்பில் தேக்கை விட பல மடங்கு விலை உள்ள மரம், ரோஸ் வுட் மரம். இதனால், மரங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.
ஈட்டி மரத்தின் இலைகள், வேர் மற்றும் பட்டை மருத்துவப் பயன்கள் மிக்கவை. சர்க்கரை பாதிப்பு, வயிற்றுப் புண், இரத்த கொழுப்பு, வாதம் மற்றும் சரும வியாதிகளைப் போக்கும் தன்மை உடையது.

ஈட்டி மரத்தின் பட்டை:
மரத்தின் பட்டையை நன்கு தூளாக்கி, அதை நீரில் இட்டு காய்ச்சி, தினமும் பருகி வர, இரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும். சர்க்கரை அளவை குறைத்து, பித்தத்தைத் தணிக்கும், வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றும், உடல் நச்சுக்களை நீக்கும் சிறந்த ஆற்றல் மிக்கதாகும்.

சுவாச பாதிப்புகளுக்கு :
நன்கு காய்ச்சிய ஈட்டி மரப்பட்டை நீரில், திரிபலா மூலிகைப் பொடியை சிறிது சேர்த்து, சுண்டக் காய்ச்சி பருகி வர, சுவாச பாதிப்புகள் விலகி, இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

கருப்பையை வலுவாக்கும் :
மகப்பேறில்லாத பெண்களின் மகவீனும் தன்மையை சரி செய்து, அவர்களின் கருப்பையை வலுவாக்கும் ஆற்றல் மிக்கது. இரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்புகளை விலக்கி, உடலை, வலுவாக்கும் தன்மை மிக்கது. வாய்ப்புண்கள் மற்றும் வாய் துர்நாற்றத்தைப் போக்கி விடும்.
ஈட்டி மரப்பட்டை, வேப்பம் பட்டை மற்றும் நாவல் மரப்பட்டை இவற்றைப் பொடியாக்கி, ஆறாத காயங்களின் மேல் வைத்து வர, காயங்கள் ஆறி விடும்.
ஈட்டி மரத்தின் பட்டைகளில் வடியும் பிசின் அதிக சக்தி மிக்கது. இந்தப் பிசினை உலர்த்தி, பாலுடன் சேர்த்து பருகி வர, உடல் இறுகி, வலுவாகும். தளர்ந்த உடலைப் புத்துணர்வாக்கும், குழந்தைப் பேறில்லாத ஆண்களின் உயிரணுக்களை வலுவாக்கும். அதிக இரத்தப்போக்கு ஏற்படும் பெண்களின் மாதாந்திர பாதிப்புகளைக் களையும்.

ஈட்டி மரத்தின் வேர் மருந்து.
மரத்தின் வேரைச் சிறிதளவு எடுத்து நன்கு அலசி, தண்ணீரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் நீரைச் சூடாக்கி, பருகி வர, உணவு அருந்த முடியாத வேதனையை அளிக்கும் வயிற்றுப் புண் பாதிப்பை சரியாக்கி, இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடலை வலுவாக்கும்.

உடல் வலிகளுக்கு :
ஈட்டி மரத்தின் சிறிய கட்டையை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரில் குளித்து வந்தால், கை கால் கழுத்து உள்ளிட்ட உடலின் வலிகள் எல்லாம், விலகி விடும்.

ஆன்மீகத்தில்:
சோதிட சாத்திரத்தில், செவ்வாய் கிரக பாதிப்புகள் விலகிட, செவ்வாய் கிரகத்தின் அம்சமாக, இந்த தோதகத்தி மரத்தை வணங்குகின்றனர். மிகக் கடுமையான வியாதிகளுக்கு எல்லாம் தீர்வாக பண்டைக்காலங்களில், தோதகத்தி மரத்தை வணங்கி, வியாதிகள் நீங்கி, உடல் நலம் பெற்றிருக்கின்றனர், முன்னோர்கள்.
தமிழகத்தில் உள்ள சிவத்தலங்களில்,.காளாண்டேஸ்வரர் எனும் திருப்பெயரில் சிவ பெருமான் எழுந்தருளி இருக்கும், திரு அம்பர் மாகாளம் திருத்தலத்தில், தல மரமாக விளங்குவது, தோதகத்தி எனும் ஈட்டி மரமே!

நாதஸ்வர இசைக்கருவி தயாரிப்பில், தோதகத்தி.
ஆச்சாள் மரம் எனும் புரச மரத்தோடு கூட, தோதகத்தி மரத்திலும், நாதஸ்வர இசைக்கருவிகள் செய்து வந்திருக்கின்றனர். காலப்போக்கில், மரத்தின் தட்டுப்பாடு காரணமாகவும், மிக அதிகமான விலையின் காரணமாகவும், பின்னர், இந்த மரத்தில் இருந்து இசைக் கருவிகளை அதிகம் தயாரிப்பதில்லை.
பழங்காலங்களில், வயலில் விளைந்த நெல்மணிகளை, உலக்கையில் இட்டு குத்தியே, அரிசிகளை சேகரிப்பார்கள், வலுமிக்க அந்த உலக்கைகள் பெரும்பாலும், தோதகத்தி மரத்தில் இருந்தே செய்யப்பட்டிருக்கும்.

மருத்துவ நன்மைகள் மிக்க, மரப்பாச்சி பொம்மைகள்.
அக்காலத்தில், பெண் குழந்தைகளுக்கு வீடுகளில், மரப்பாச்சி பொம்மை எனும் மரத்தாலான சிறு பொம்மைகளை விளையாட வாங்கிக் கொடுப்பார்கள். அவற்றை குழந்தைகள் வாயில் வைத்து விளையாடினாலும், குழந்தைகளின் உடல் நலன் கெடாது, சொல்லப்போனால், அவர்களின் உடலுக்கு அவை நன்மையே செய்யும். எதனால் தெரியுமா, அந்த பொம்மைகள் யாவும் மருத்துவப் பலன்கள் மிக்க, ஈட்டி மரத்தில் இருந்து செய்யப்படுவதால் தான்.
தற்காலத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கும், இரசாயனப் பூச்சுடன் கூடிய சைனா பொம்மைகள், அவற்றைத் தொட்டாலே, குழந்தைகளின் உடல் நலனில் பாதிப்புகளை உண்டாக்கி விடுகின்றன. இன்றும் கிடைக்கிறது மரப்பாச்சி பொம்மைகள், தேடி வாங்கிக் கொடுத்தால், குழந்தைகளின் உடல் நலம் காக்கலாமே!

அலங்காரப் பொருட்கள் தயாரிக்க :
இரும்பைப் போன்ற உறுதியும், எடுப்பான கருஞ்சிவப்பு வண்ணமும் கொண்டதால், ஈட்டி மரத்தில் இருந்து நிறைய மரப் பொருட்கள் செய்யப்பட்டன. மிக நுட்பமாக கைகளால் கடைசல் வேலை செய்யப்படும் மேஜை, நாற்காலிகள், கட்டில் மற்றும் அலமாரி தயாரிப்பில், இந்த மரங்கள் பயன்படுத்தப்பட்டன. நிறைய மரப்பொருட்கள் வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால், ஈட்டி மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டன.
மரங்கள் அழியும் நிலைக்கு வரும் வேளையில் அரசாங்கம், தோதகத்தி மரத்தை, தேசிய மரமாக அறிவிக்க, மரத்தை வெட்டி அழித்த, ஆபத்து நீங்கியது.
கூட இருந்து, நட்புக்கு பங்கம் விளைவித்து, எதிர் சாராரிடம் சேர்ந்துகொள்பவர்களை, கருங்காலிகள் என்பார்கள். இந்த வார்த்தை, அரசியலில், சர்வசாதாரணமாக கையாளப்படும்.

கோடாரி செய்யவும் :
இதேபோல, ஈட்டி மரத்தையும், தமிழில், கருங்காலி என்று அழைக்கின்றனர். இதற்கு என்ன பொருள் தெரியுமா?
ஈட்டி மரத்தை வெட்டி, துண்டுகளாக்க, ஈட்டி மரத்தினாலான பிடியைக் கொண்டு விளங்கும் ஆயுதமாக, இரும்பு கோடாரி பயன்படுகிறது. தன் இனத்தை அழிக்கத் தானே, துணை போவதால், இந்த மரத்தை, தமிழர்கள், கருங்காலி என்று அழைத்தனர்.



Click it and Unblock the Notifications











