Just In
- 2 hrs ago Today Rasi Palan 27 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- 7 hrs ago சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
- 10 hrs ago சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- 11 hrs ago தென்னிந்தியாவின் அதிசயமான கர்நாடகாவில் இருக்கும் வித்யா சங்கர் கோவில்... இங்க உள்ள அதிசயம் என்ன தெரியுமா?
Don't Miss
- News நெருங்கும் லோக்சபா தேர்தல்.. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது! நாளை வேட்புமனு பரிசீலனை
- Finance ஆனந்த் மஹிந்திரா ஹைதராபாத்தில் இப்படியொரு பிஸ்னஸ் செய்கிறாரா..? ரூ.500 கோடி புது முதலீடு..!!
- Automobiles பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
- Movies திடீரென உயிரிழந்த சேஷு.. பதறியடித்து ஓடிவந்த சந்தானம்.. நள்ளிரவில் குவிந்த லொள்ளு சபா டீம்
- Technology ஆரம்பிச்சிட்டாரு.. புது கஸ்டமர்கள்.. 50 நாட்கள் இலவசம்.. ரூ.599 திட்டம்.. 6 மாதம் வேலிடிட்டி.. ஓடிடி சந்தா!
- Sports இதுதான் தோனியின் பவர்.. பார்த்த உடன் மிரண்டு போன மும்பை லாபி.. சிஎஸ்கே மேட்ச்சில் என்ன நடந்தது?
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
வீட்ல கணவன் மனைவி சண்டையை தீர்த்து வைக்கும் அபூர்வ மரத்தோட பேர் தெரியுமா?
வெப்பாலை மரத்தின் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
வறண்ட பாலைவனப் பிரதேசங்களில் வளரும் வெப்பாலை மரம், பாலை நிலத்தில், மற்றும் நிலப்பகுதிகளில் வளரும் மரம் செடி கொடிகள்கூட வாடி, கருகும் கடும் கோடைக்காலத்திலும், இயற்கையின் கருணையால், இலைகள் தளிர்த்து, பூக்கள் மலரும் அதிசய மரமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் சில திருக்கோவில்களில் தல மரமாகத் திகழும் அரிய மரம், வெப்பாலை மரம்.
சற்றே நீளமான இலைகளுடன், கொத்தாக மலரும் வெளிர்வண்ணப் பூக்களுடன், இதன் காய்கள் நீண்டு, இரட்டையாகக் காய்த்துக் குலுங்கும். இதன் மரப்பட்டைகளை வெட்டினால், நீர்ச்சத்து மிக்க பால் பீறிடும், இதனாலே, இந்த மரத்தின் பட்டைகளை, யானைகள் தந்தத்தால் உரித்து, இதன் பாலைப் பருகும் என்பர். யானை உரித்த பட்டைகளைக் கொண்டதாலோ என்னவோ, இதன் பட்டை உரிந்த தண்டுகள், இள வெண்ணிறத்தில், தந்தங்கள் போன்றே, காணப்படும். இதனால், தந்தப் பாலை என்றும் வெப்பாலை மரத்தை அழைப்பர்.
தமிழகத்தில், இரும்பாலை, நிலப்பாலை என்று அழைக்கப்படும் வெப்பாலை, சாலையோரங்களில், குறுங்காடுகள் மற்றும் மலைகளில் பரவலாகக் காணப்படும். வெப்பாலை மரத்தின் இலைகள், பூ, காய்கள், பட்டை போன்ற அனைத்து பாகங்களும், மனிதர்களுக்கு, நற்பலன்கள் தரவல்லவை.
வெப்பாலையின் குணாதிசயமாக, உடல் சூட்டையும் அதனால் ஏற்படும் வியாதிகளையும் தணிக்கக்கூடியது. இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் கரைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது, வியர்வையை அதிகரித்து, சரும வியாதிகள், மூல வியாதிகளைப் போக்கக்கூடியது. வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, முக்குற்றங்கள் எனும் வாதம், பித்தம் மற்றும் கபம் இவற்றை சமநிலையில் இருத்தி, உடல் ஆரோக்கியத்தை சீராக்கும் வல்லமை மிக்கது, வெப்பாலை.
வெப்பாலையில் காணப்படும் வேதிப்போருட்களான சைக்ளோஆர்டேன், பீடா சிடோஸ்டெரால், பீடா அமிரின் மற்றும் தாதுக்கள், அமிலங்கள், உடலில் ஏற்படும் வியாதிகளைத் தணித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.