Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
நோய்களை குணமாக்கும் மல்லிகைப் பூவின் மகத்துவம் தெரியுமா?
மல்லிகைப்பூ பெண்கள் சூடுவது மட்டும்தான் நினைவுக்கு வரும். அது அழகிற்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என அறிவீர்களா? அதன் குணங்களை இங்கே படியுங்கள்.
மல்லிகைப் பூவின் வாசனையில் மயங்காதவர்கள் யாருமில்லை. அதன் வாசம் மனதை அமைதிப்படுத்தும். இந்த பூவின் வாசனையைப் போலவே அதன் மருத்துவ குணங்களும் ஆச்சரியம்.

மல்லிகை பிலிபைன்ஸ் நாட்டின் தேசிய மலர். இந்தியா, தாய்லாந்துஇலங்கை என பல நாடுகளிலும் காண்ப்படும். இந்த மல்லிகையின் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனைப் பற்றி தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

வயிற்றுப் புழுக்கள் வெளியேற :
சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்கு மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி குடித்து வந்தால் போதும். குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

சிறு நீரக கற்கள் கரைய :
மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

மாத விலக்கு சமயத்தில் :
பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி பெற :
மல்லிகைப் பூ ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்றும் மருத்துவம் சொல்கிறது.

தாய்ப்பால் நிறுத்த :
தாய்ப்பால் நிறுத்தவும், அதனால் உண்டாகும் வலியையும் வீக்கத்தினையும் குறைக்க, மல்லிக்கைப்பூ செண்டை மார்பில் சுற்றி இரவு முழுவதும் வைத்தால், தாய்ப்பால் சுரப்பது நின்று போகும்.



Click it and Unblock the Notifications