Latest Updates
-
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,!
சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் வில்வ இலை... தினமும் டீ வெச்சு குடிங்க...
இந்தியாவில் காணப்படும் மருத்துவ மூலிகைகள் ஏராளமான பிணிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. வில்வ இலை பொதுவாக சிவபெருமானை வழிபடும்போது பயன்படுத்தப்படும். இந்த வில்வம் இலை கடவுள் வழிபாட்டுக்கு மாத்திரம் இல்
நமது முன்னோர்கள் அந்த காலத்திலயே இயற்கையோடு ஒன்றியே உடல் நலத்தையும் பேணிக் காத்து வந்தனர். அவர்கள் நிறைய மூலிகைகளை தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள். இன்றளவும் உலகின் பல இடங்களில் ஆயுர்வேத மருத்துவம் பேரும் புகழும் பெற்று தலைசிறந்து விளங்கி வருகிறது. கெமிக்கல் மருத்துவ முறைக்கு பதிலாக இந்த ஆயுர்வேத மூலிகை மருந்துகள் மக்களிடையே மிகவும் பரவலாக காணப்படுகிறது. சில இனத்தவர்கள் மற்றும் சில நாட்டினர் இந்த மூலிகை முறைகளை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.
உங்களுக்கு நன்றாகவே தெரியும் தாய்லாந்து நாட்டில் உள்ள துளசி மூலிகை மிகவும் புகழ் பெற்றது. நமது இந்தியாவிலும் தாய்லாந்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகைகள் உள்ளன. இந்தியாவில் காணப்படும் மருத்துவ மூலிகைகள் ஏராளமான பிணிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த வில்வம் இலை. இந்த வில்வம் இலை கடவுள் வழிபாட்டுக்கு மாத்திரம் இல்லாமல் ஏராளமான தனிச் சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது.

அதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு தான் இந்த கட்டுரை. சரி வாங்க அதன் பயன்களை பார்க்கலாம்.

வில்வ பழங்கள்
image courtesy
இது வில்வம் அல்லது பில், வுட் ஆப்பிள் அல்லது பில்வா தாவரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரம் ஆகும். இது இந்தியாவின் புனிதமான தாவரமாக உள்ளது. இதன் மருத்துவ குணத்தால் சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது. இதன் இலை, தண்டு மற்றும் பழம் என்று ஒட்டுமொத்த தாவரமும் நமக்கு பலனளிக்கிறது.
வில்வ பழம் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இந்தோனேசியா ஆரஞ்சு போல் காணப்படும். ஆசியாவில் இந்த பழத்தை மஜா பழம் என்று அழைக்கின்றனர். இதன் சுவை கசப்பாக இருக்கும். இந்தோனேசிய புராணக்கதைகளில் ஒருவரான மஜபஹீத் என்பவருடன் இந்த வில்வ பழத்தை தொடர்புபடுத்தி கூறுகின்றனர். இந்த வில்வ தாவரத்தை இந்தோனேசியா மக்கள் நூற்றாண்டுக்கு மேல் மருத்துவ துறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவ பயன்கள்
வில்வ இலையில் உள்ள ஆன்டி பயாடிக் பொருட்கள் சில நோய்களை குணப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோய்
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் டயாபெட்டீஸ் நோய் வருகிறது. இந்த டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க வில்வ இலை உதவுகிறது. இந்த இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்தாலே போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
தயாரிக்கும் முறை
முதலில் 7 வில்வ இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி அந்த தேநீரை தினமும் 3 முறை பருக வேண்டும்.

சரும நோய்கள்
சின்னஞ் சிறிய குழந்தைகள், பெரியவர்கள் நிறைய சரும பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த மாதிரியான சரும பிரச்சினைகளுக்கு வில்வ இலை தீர்வாக அமைகிறது. இந்த வில்வ இலைகளை சரும பிரச்சினைக்கு கீழ்க்கண்ட முறையில் பயன்படுத்த வேண்டும்.
தயாரிக்கும் முறை
முதலில் வில்வ இலைகளை உலர வைத்து கொள்ளுங்கள். மஞ்சள் கிழங்கு மற்றும் அரிசி இவற்றை இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக காய வைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சரும பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படும்.

வயிற்று போக்கு
வில்வ பழம் வயிற்று போக்கிற்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. எனவே உங்கள் வயிற்று போக்கு பிரச்சினையை ஒரு நொடிப் பொழுதில் குணப்படுத்த வில்வ பழம் கையில் இருந்தால் போதும்
தயாரிக்கும் முறை
110 மில்லி லிட்டர் தண்ணீரில் வில்வ பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். ஒரு நாளைக்கு ஒரு முறை என குடித்து வந்தால் உடனே வயிற்று போக்கு நிற்கும்.

காய்ச்சல்
image courtesy
வில்வ தாவரம் காய்ச்சலுக்கும் ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. உங்கள் உடம்பில் ஏதாவது நோய் தாக்குதல் ஏற்பட்டால் வில்வ வேரை பயன்படுத்தலாம்.
தயாரிக்கும் முறை
110 மில்லி லிட்டர் தண்ணீரில் வில்வ வேரை போட்டு கொதிக்க விடவும். இது காய்ச்சல் மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

பக்க விளைவுகள்
இந்த வில்வ இலையால் நமக்கு ஏராளமான நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பக்க விளைவுகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
கருவுற்ற பெண்கள் இந்த வில்வ இலைகளை சாப்பிடக் கூடாது.
இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் நீங்கள் ஏற்கனவே மருந்து எடுத்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்துவது நல்லது.



Click it and Unblock the Notifications











