Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
மூட்டு வீக்கத்தையும், சிறுநீரக பாதிப்புகளையும் சரிசெய்யும் வெள்ளரி பிஞ்சு!!
வெள்ளரிப் பிஞ்சை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத மருத்துவ பலன்களை இந்த கட்டுரையில் காணலாம்.
மனிதருக்கு உடல் நலம் தரும் கொடி வகைகளில் உள்ள மூலிகைகளில் வெள்ளரியும் ஒன்று. வெள்ளரி பிஞ்சு, காய் மற்றும் பழம் உடலுக்கு நன்மைகள் செய்பவை. வளமான மண்களில் மட்டும் விளையும் வெள்ளரி, எல்லா சீசன்களிலும் தேவையுள்ள ஒரு சிறந்த காய்கறி வகையாகும்.
கொடியாகப் படர்ந்து வளரும் வெள்ளரியை, வீடுகளில் தோட்டங்களில், தொட்டிகளில் கூட வளர்த்து, தினமும் வெள்ளரிப் பிஞ்சை சாப்பிட்டு, உடல் நல வளம் பெறலாம்.

வெள்ளரியில் அதிக அளவில் காணப்படும் நீர்த்தன்மையால், நா வறட்சியைப் போக்கி, வயிற்று எரிச்சல், சிறுநீரக பாதிப்புகளை சரி செய்கிறது. செரிமான சக்தியைத் தூண்டுகிறது. இதில் புரதம், இரும்புச்சத்து தாதுக்கள் மற்றும் சுண்ணாம்புச்சத்து மிகுந்துள்ளன. சுண்ணாம்புச்சத்து, இரத்த அழுத்த பாதிப்புகளை சரி செய்யும்.
முக்குற்றங்கள் எனும் வாதம், பித்தம் கப பாதிப்புகளை உடலிலிருந்து விலக்கி, இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. உடலின் சரும பாதிப்புகளை சரி செய்து, மலச் சிக்கலையும் போக்கும்.
கல்லீரல், மூளைச் சூட்டை தணித்து, அவற்றுக்கு புத்துணர்வு தந்து, உடல் உள்ளுறுப்புகளின் இரணங்களை ஆற்றும். புகை பிடிப்பவர்களின் உடலை பாதிக்கும் நிகோடின் நச்சு பாதிப்புகளை, வெள்ளரி சரிசெய்கிறது.
கோடையில் காசு கொடுத்து, குளிர் பானங்கள், ஐஸ்க்ரீம் போன்ற உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களை பருகுவதைத் தவிர்த்து, வெள்ளரி பிஞ்சு, வெள்ளரி பழம் போன்ற இயற்கை தந்த கோடை குளிர் உணவுகளை சாப்பிட, கோடைக் காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச் சத்து குறைபாடு பாதிப்புகள், நா வறட்சி, அதிக தாகம் போன்றவை நீங்கி, உடல் நலமடையும்.

வெள்ளரிப் பிஞ்சின் அற்புதங்கள் :
வெள்ளரி பிஞ்சு காய், பித்தத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது, தலைச் சுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரியில் உள்ள குறைந்த கலோரிகள், அதை அதிகம் உண்பதன் மூலம், உடல் எடையை குறைக்க வல்லது.
சர்க்கரை பாதிப்புள்ளவர்கள், வெள்ளரிப் பிஞ்சை, தினமும் சாப்பிட்டு வர, இரத்தத்தில் உள்ள சர்க்கரை பாதிப்புகள் விலகும். வெள்ளரிப் பிஞ்சை தினமும் அவ்வப்போது சாப்பிட, உடல் எடை குறையும், விதைகளை துப்பிவிடாமல், விதைகளையும் சேர்த்தே சாப்பிட வேண்டும்.
இதுவே, மூட்டுக்களில் ஏற்படும் வலிகளையும், போக்கும் வல்லமைமிக்கது. இருப்பினும், இருமல், சளித் தொல்லைகள் உள்ளவர்கள், வெள்ளரியை சாப்பிடுவதை தவிர்த்தல், நலம்.
காரம் அதிகமான உணவுகள் சாப்பிடுபவர்கள், வெள்ளரிக் காயை தயிர் பச்சடியாகவோ அல்லது சாலட் போன்றோ அவசியம் சாப்பிடவேண்டும். மற்ற காய்கறிகளும் பச்சையாக இதில் சேர்த்து சாப்பிடலாம். வெள்ளரியின் நீர்ச்சத்து, காரம் மிகுந்த உணவு வகைகளை, உள்வாங்கி, உடலை சீர்செய்யும் ஆற்றல் மிக்கது.
வெள்ளரிக் காய்களை சாறாக்கியோ அல்லது பச்சையாகவோ பயன்படுத்துவதே, சிறந்தது, ஏனெனில் சமைக்கும்போது, அதன் இயல்பான தாதுக்களை, அவை இழந்துவிடும்.

மலச்சிக்கல் மற்றும் அல்சர் :
அல்சர் எனும் வயிற்றுப்புண் உள்ளவர்கள், வெள்ளரிச்சாறு அடிக்கடி பருகி வர, வயிற்று வேதனைகள் குறைந்து உணவு சாப்பிட, விருப்பமுண்டாகும்.
தினமும் வெள்ளரிப் பிஞ்சு தொடர்ந்து சாப்பிட்டு வர, மலச் சிக்கல் நீங்கி விடும், உடல் பொலிவாகும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் :
வறண்ட சருமம் கொண்டவர்கள், முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் விலக, வெள்ளரிக்காயை சாறாக்கி, முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து, அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவர, முகம் மென்மையாகி, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மெல்ல விலகிடும். மேலும், வெள்ளரிச் சாற்றுடன் பாலை சேர்த்து, முகத்தில் தடவி வர, முகப் பொலிவு உண்டாகும்.

முடி உதிர்தல் :
தலைமுடி உதிர்தல் மற்றும் முடி வளர, வெள்ளரிச் சாறு, கேரட் மற்றும் பசலைக் கீரை சாறு கலந்து, தினமும் பருகி வர, தலைமுடி கருகருவென வளர்ந்து, முடி உதிர்தலும் அகன்றுவிடும்.

மஞ்சள் காமாலை :
உடல் சத்தும் தெம்பும் பெற, வெள்ளரிச் சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம். வெள்ளரிச் சாற்றுடன் தேன் சேர்த்து சாப்பிட, தொண்டை மற்றும் வயிற்று பாதிப்புகள் விலகும். வெள்ளரிக் காயை தினமும் தொடர்ந்து சாப்பிட்டுவர, சரும பாதிப்புகள் விலகும், மஞ்சள் காமாலை வியாதி குணமாகி, உடல் வலுவாகும்.

புத்துணர்வு பெற :
வெள்ளரிப் பழத்தை பால் மற்றும் கருப்பட்டி எனும் பனை வெல்லம் அல்லது, நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட, உடல் குளிர்ச்சியாகி, நலம் பெறலாம். கோடையில் சிறந்த ஊட்டச் சத்து உணவு, வெள்ளரிப் பழமே, ஆகும்.
மேலும், வெள்ளரிப் பழத்தை கூழாக்கி, ஜூஸ் போல, நாட்டு சர்க்கரை சேர்த்து பருகி வர, கோடைக் காலத்தில் உடலில் ஏற்படும், சோர்வு, நா வறட்சி, களைப்பு போன்றவை விலகி, உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும்.

விவசாயத்தின் அவல நிலை :
வெள்ளரியின் தாயகம் நம் தேசமாக இருந்தாலும் கூட, இன்று உலகளவில் அதிக வெள்ளரி உற்பத்தியில், சீனாதான் முன்னிலையில் இருக்கிறது என்பது நமக்கு, ஒரு வேதனையான தகவல்தான்.
இதுபோல, நிறைய காய்கறிகள், பழங்கள் மற்றும் கிழங்குகள் உற்பத்தியில் இன்றும், நாம் பின்தங்கியே, இருக்கிறோம். நாம் அணு ஆயுத வல்லரசாவதில் காட்டும் அக்கறையில் ஒரு சிறு அளவு, உணவு தானிய உற்பத்தியில் காட்டியிருந்தால், இன்று நாம் பருவ நிலை மாறுபாடுகளில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில், வெங்காயம், தக்காளி, பருப்பு வகைகள் போன்றவற்றின் தேவைக்காக, வெளிநாடுகளில் இருந்து பெறக்கூடிய நிலை ஏற்பட்டிருக்காது, அல்லவா! இன்னமும் சில பொருட்களை, நாம் இறக்குமதி செய்தே, வருகிறோம்.
மிகப் பெரும் பரப்பளவைக் கொண்ட நம் தேசத்தில், வேற்றுமையில் ஒற்றுமை எனும் உண்மைக்கேற்ப, பல கலாச்சார மக்கள் பல விதமான இயற்கை தட்ப வெப்ப சூழ்நிலை மாற்றங்கள் கொண்ட இடங்களில், வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் சில இடங்களில் மிகையான உற்பத்தி, மற்ற இடங்களில் அதன் பற்றாக்குறை, இவையாவும் சரியான ஒருங்கிணைப்பு இன்றி ஏற்படுகின்றன.
நாம் அடிக்கடி செய்திகளில் காண்போம், வட நாட்டில் தக்காளி விளைச்சல் அதிகரித்து, உற்பத்தி விலைகூட கிடைக்காமல், ரோட்டில் வீசிச் சென்றனர், பாலுக்கு ஏற்ற விலை கிடைக்காததால், பாலை ரோட்டில் ஊற்றி, தமிழக பால் வியாபாரிகள் போராட்டம், இப்போது அதிக விலையில் விற்கும் சிறிய வெங்காயத்தின் இந்த நிலைக்கு காரணம், உற்பத்தி குறைவு என்பது தான். ஆயினும் தமிழகத்தில் விளைந்த சிறிய வெங்காயத்தினை விற்பனை செய்ய வழியின்றி, அழுகும் அவல நிலையையும் செய்திகளில் நாம் காண்கிறோம்.
ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இன்றி, நம் தேசத்தின் வளத்தை, நாமே அழிக்கிறோம், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழாக்குகிறோம் என்பதே உண்மை.



Click it and Unblock the Notifications











