Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன?
இந்த மாதிரி குளிச்சா உங்க நோய்கள் மாயமா போகுமாம்! அப்படி என்ன அபூர்வம்னு தெரிஞ்சுக்க இதப் படிங்க!!
உடல் வலியையும் அசதியையும் போக்கும் அற்புத மூலிகை குளியல் பற்றி உங்களுக்காக போல்ட்ஸ்கை இங்கே விவரித்துள்ளது.
அலுவல் காரணமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் அதிகம் அலைச்சலில் இருக்கும் விற்பனைப்பிரதிநிதிகளுக்கும், ஏற்படும் உடல் வலி, உடல் அசதி, மற்றும் இடுப்பு,கைகால் மூட்டுவலியை நாம் பைசா செலவில்லாமல் வீட்டிலேயே போக்கலாம்.

ஒரு பைசா கூட செலவில்லாமல், இந்த மூலிகைக்குளியலை நாம் வீட்டிலேயே குளிக்கலாம், உடல்பு வலி,சோர்வு நீங்கி,புத்துணர்ச்சியுடன் உற்சாகத்தை உடனே அனுபவிக்கலாம். உடம்பு வலிக்கு விடை கொடுக்கும் இந்த மூலிகைக்குளியலுக்குத் தேவை, சில இலைகள் மட்டுமே! அது எந்த இலைகள்? எங்கு கிடைக்கும்? கிராமங்களில், வேலிகளுக்கு சப்போர்ட்டாக, "போத்து" எனும் சிறுமரவகை குச்சிகளை ஊன்றியிருப்பார்கள்.
அது ஆடுமாடுகளிடமிருந்து அந்த விளைநிலத்தை பாதுகாக்கும், வேலிகளுக்கும் தூணாக,இருக்கும் மேலும் அதிக உயரமும் வளராது. அத்தகைய வகைச்செடிகள்தான் நொச்சி,நுணா மற்றும் ஆடாதோடை மற்றும் வாதநாராயணா இலை,புளிய இலை.

ஆடாதோடை இலை :
ஆடாதோடை செடிகள் , அவற்றின் அற்புத நோயகற்றும் தன்மைகளால், சித்தர்களால் கற்பமூலிகை எனப் பெயர் பெற்றது.
கிராமங்களில் சாலையோரம்,வீடுகளின் வாசலில் மற்றும் வயல்களின் வேலிகளில் அதிக அளவில் காணப்படும். ஆடாதோடை இலைகள் தசைவலிகளைப் போக்கும், நாட்பட்ட சளியைப்போக்கும், ஜுரம் நீக்கும். தொண்டைப்பாதிப்புகள் நீக்கி குரல்வளம் சீராக்கும்.

வாத நாராயண இலை :
வாதநாராயணா இலை, அனைத்துவகை வாதங்களும் சரியாகும், கட்டிகள் மற்றும் வீக்கம் தீரும். உடல்வலி போக்கும்.வாதநாராயணா இலையுடன் பூண்டு சேர்த்து வேகவைத்து,உணவுடன் கலந்து சாப்பிட, வாயு மற்றும் மூட்டுவலியால் தீரும். இதன் இலை, எல்லாவகையிலும் நன்மை செய்யும்.

நுணா இலை :
நுணா இலை, மிகுந்த மருத்துவ பலன்கள் உடையது பொதுவாக வெப்பம் தணிக்கும்,வயிற்றுக்கோளாறுகள் நீக்கும்,நுணா இலைச்சாறு இடுப்புவலி போக்கும், நுணாக்காயுடன் கல் உப்பு சேர்த்து அரைத்து காயவைத்து பல்துலக்கிவர, அனைத்துவகை பல்நோய்கள் நீங்கும். இதன் வேர்ப்பட்டை,இலைகள் மற்றும் காய்கள் பல்வேறு நோய்கள் தீர்க்கக்கூடியது.

நொச்சி இலை :
நொச்சி இலை,சிறந்த கிருமிநாசினி இதன் அனைத்து பாகங்களும் பல்வேறு நோய்களுக்குத்தீர்வாகும், நொச்சி இலைச்சாறு நாட்பட்ட புண்களை ஆற்றும், இலைகளை வைத்து ஒத்தடம் கொடுக்க,சுளுக்கு விலகும், நொச்சிஇலைக் குளியல் முதுகு வலி நீக்கும்,வாதம் போக்கும். நொச்சி இலை சருகைக் கொண்டு, [ காய்ந்த இலை ] வீட்டில் மூட்டம் போட்டுவர,கொசுத்தொல்லை அடியோடு நீங்கும்.

புளிய இலை :
புளிய இலை, உடலுக்கு குளிர்ச்சி தரும், மூட்டு வீக்கம் மற்றும் வலி போக்கும். சரி, இவற்றையெல்லாம் எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போமா!

உபயோகிக்கும் முறை :
வாதநாராயணன் இலை, நொச்சி இலை,நுணா இலை,ஆடாதோடை இலை மற்றும் புளிய இலை. இவற்றை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து நீரில் நன்கு அலசி, பின் முழுவதும் நீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் அல்லது அண்டாவில், இவையனைத்தையும் இட்டு, இதமான சூட்டில் கொதிக்கவைக்கவேண்டும்.
உடல் சூடு தாங்கும் வெப்ப அளவு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, உடல் வலி எங்கெங்கு இருக்கிறதோ, அங்கே ஒரு துணியை இந்த நீரில் நனைத்து சிறிதுநேரம் ஒத்தடம் கொடுத்துவிட்டு, பிறகு மீதி உள்ள நீரில் குளித்துவிடவேண்டும். தேவைப்பட்டால், சிறிது சாதாரண வெந்நீரில் குளித்து, குளியலை முடிக்கலாம்.குளித்தபின், வலிகள் நீங்கி,புத்துணர்ச்சியுடன் உற்சாகத்தை உணரலாம்.முயன்று பாருங்கள்! இதில் சில இலைகள் கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் இலைகளைக்கொண்டு, முயன்று பாருங்கள்.

கிடைக்கும் இடங்கள் :
இத்தகைய அற்புத ஆற்றல்கொண்ட இந்த மூலிகைகளை நாம் காசு கொடுத்து கடையில் வாங்கத்தேவையில்லை, இவற்றையெல்லாம்,இயற்கை நமக்கு இலவசமாகவே அளிக்கிறது,இந்த வளங்களெல்லாம்,நம்முடைய கிராமங்களில் இருக்கிறது. சரி, நகரங்களில் வசிக்கும் நாங்கள் என்ன செய்வது, என்று கேட்கிறீர்களா? வார லீவு நாளில், வண்டியை எடுத்துக்கொண்டு நகரத்தின் வெளியே உள்ள, கிராமப்புறங்களில் தேடினால் நிச்சயம் கிட்டும், இல்லையெனில், உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் கிராமங்களிலிருந்து கிடைக்குமா,என்று பாருங்கள். கிடைப்பதில் சிரமமா, கவலை வேண்டாம், நாட்டுமருந்துக்கடைகளில், நொச்சி தைலம் மற்றும் வாதத்தைலம் என்பவை கிடைக்கும், அவற்றை வெந்நீரில் கொதிக்கவைத்து குளிக்கலாம்.
மேலும் நகரங்களில்,சொந்த வீடுகளில் வசிப்போர் அவசியம் வீடுகளில், நொச்சி ,நுணா,ஆடாதோடை மற்றும் வாதநாராயணா இவற்றை வளர்த்து வரலாம்.



Click it and Unblock the Notifications











