Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
காச நோயை விரட்டும் கற்ப மூலிகை எது?
உலகில் காடுகளிலும் மலைகளிலும் பல ஆயிரக்கணக்கான மூலிகை செடிகள் உள்ளன. அவைகள் ஏதாவது ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்ப்டத்தான் இயற்கை படைத்திருக்கிறது.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அரிய குணங்களை கொண்ட மூலிகைகளை கற்ப மூலிகைகள் என்பார்கள். இந்த வகையைச் சேர்ந்த பல மூலிகைகள் நம்மை நீண்ட ஆயுளோடு வாழ வைக்கும். நம்மை ஆரோக்கியப்படுத்தும் மூலிகைகளை கற்ப மூலிகைகள் என்பார்கள். அந்த வகையான கற்ப மூலிகை இங்கு காண்போம்.

கண்டங்கத்திரி :
கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.
இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
காச நோய்க்கு :
நுரையீரலில் உண்டான அலர்ஜியால், ஜலதோஷம், மூச்சிரைப்பு, ஆஸ்துமா மற்றும் இதன் தீவிரத்தால் காச நோயும் வருகிறது.
காச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகியவற்றை சம அளவு எடுத்து, இடித்து நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி இந்த கசாயத்தை காலை மாலை குடித்தால் காச நோய் சரியாகிவிடும்.
தலையில் நீர் கோத்து கொள்வதற்கும், வறட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி பயன்படுகிறது.
கண்டங்கத்திரி ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.
கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்குபற்று போட்டால் நிவாரணம் உடனடியாக கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













