Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சீந்தில் என்ற அதிசய மூலிகைப் பற்றி தெரியுமா?
சீந்தில் கொடி என்பது மரத்தில் படரும் தாவரம். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். கிராமத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க இந்த கொடியின் தண்டினை எண்ணெயில் போட்டு அதனை தலையில் தேய்த்து குளிக்க வைப்பார்கள்.

இதிலிருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் தாவர அறிவியல் பெயர் Tinospora cordifolia என்பதாகும். இது அற்புத அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைச் செடி. இதன் சத்துக்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் ஊட்டசத்து நிபுணர் அன்ஷுல் ஜெய் பரத் கூறுகிறார்.
நாள்பட்ட காய்ச்சலுக்கு :
அடிக்கடி வரும் காய்ச்சலுக்குசிறந்த மருந்தாக இந்த மூலிகை விளங்குகிறது. இதிலுள்ள குணங்கள் காய்ச்சலில் அறிகுறிகளையும் முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவற்றை விரட்டி அடிக்கிறது.
ஜீரண் சக்தியை அதிகப்படுத்தும் :
ஜீரண சக்தியை தூண்டும். மலச்சிக்கலை சரிபடுத்தும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும்.
வாதத்தை சரிபடுத்தலாம் :
ஆர்த்ரைடிஸ் மற்றும் அதனால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து ஆயுர்வேத மருந்தகங்களில் விற்ப்பார்கள். அதனை பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் ஆர்த்ரைடிஸினால் உண்டாகும் பாதிப்புகள் விலகிப் போய்விடும்.
கண்பார்வையை அதிகப்படுத்தும் :
சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களில் தடவினால், கண் பார்வை தெளிவாக இருக்கும். இது பரவலாக இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.
சர்க்கரை வியாதி, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் :
இதிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகியவற்றை சரிபடுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
இவற்றில் சக்திவாய்ந்த ஆன்டி - ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும், நச்சுக்களை வெளியேற்றுகிறது. கல்லீரல் பாதிப்பிகளையும், சிறு நீரக தொற்றையும் குணப்படுத்தும் ஆற்றலுடையது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















