Just In
- 50 min ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சீந்தில் என்ற அதிசய மூலிகைப் பற்றி தெரியுமா?
சீந்தில் கொடி என்பது மரத்தில் படரும் தாவரம். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். கிராமத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க இந்த கொடியின் தண்டினை எண்ணெயில் போட்டு அதனை தலையில் தேய்த்து குளிக்க வைப்பார்கள்.
இதிலிருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் தாவர அறிவியல் பெயர் Tinospora cordifolia என்பதாகும். இது அற்புத அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைச் செடி. இதன் சத்துக்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் ஊட்டசத்து நிபுணர் அன்ஷுல் ஜெய் பரத் கூறுகிறார்.
நாள்பட்ட காய்ச்சலுக்கு :
அடிக்கடி வரும் காய்ச்சலுக்குசிறந்த மருந்தாக இந்த மூலிகை விளங்குகிறது. இதிலுள்ள குணங்கள் காய்ச்சலில் அறிகுறிகளையும் முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவற்றை விரட்டி அடிக்கிறது.
ஜீரண் சக்தியை அதிகப்படுத்தும் :
ஜீரண சக்தியை தூண்டும். மலச்சிக்கலை சரிபடுத்தும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும்.
வாதத்தை சரிபடுத்தலாம் :
ஆர்த்ரைடிஸ் மற்றும் அதனால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து ஆயுர்வேத மருந்தகங்களில் விற்ப்பார்கள். அதனை பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் ஆர்த்ரைடிஸினால் உண்டாகும் பாதிப்புகள் விலகிப் போய்விடும்.
கண்பார்வையை அதிகப்படுத்தும் :
சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களில் தடவினால், கண் பார்வை தெளிவாக இருக்கும். இது பரவலாக இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.
சர்க்கரை வியாதி, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் :
இதிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகியவற்றை சரிபடுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
இவற்றில் சக்திவாய்ந்த ஆன்டி - ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும், நச்சுக்களை வெளியேற்றுகிறது. கல்லீரல் பாதிப்பிகளையும், சிறு நீரக தொற்றையும் குணப்படுத்தும் ஆற்றலுடையது.