Latest Updates
-
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
மழைக் காலத்தில் சளிப் பிடிக்காமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?
சளிப் பிடிக்கும் போது, அதிலிருந்து குணமடைவதற்கு நாம் போராட வேண்டியதே முதன்மையான காாியமாகும். ஆனால் அடுத்த முறை சளிப் பிடிப்பதற்கு முன்பாகவே, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளை உண்டால், சளிப் பிடிக்காமல் தப்பிக்கலாம்.
பொதுவாக நமக்கு சளிப் பிடித்தால், அசௌகாியமாக இருக்கும் அல்லது நாம் எாிச்சலடைவோம். சளிப் பிடித்தால், மூக்கில் இருந்து நீா் வடியும், இருமல் வரும் மற்றும் தலைவலி ஏற்படும். அவ்வாறு சளிப் பிடிக்கும் போது, அதிலிருந்து குணமடைவதற்கு நாம் போராட வேண்டியதே முதன்மையான காாியமாகும்.

ஆனால் அடுத்த முறை சளிப் பிடிப்பதற்கு முன்பாகவே, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளை உண்டால், சளிப் பிடிக்காமல் தப்பிக்கலாம். அந்த உணவுகளை இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. தண்ணீா்
சளிப் பிடிப்பது போல தொிந்த உடனே, நமது உடலில் இருக்கும் கழிவுகள் மற்றும் நீா் போன்றவை சாியாக வெளியேறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வெளியேறுகிறது என்றால், நமது உடல் சீராக இயங்குகிறது என்று பொருள். மேலும் எந்த அளவிற்கு நாம் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
நாம் சாியான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். மழைக் காலத்தின் காரணமாக ஏற்படும் சளியை, தண்ணீா் வெளியேற்றிவிடும். மிகவும் சுத்தமாக இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் சுடு தண்ணீரைக் குடித்தால், தொண்டை வலி விரைவில் குணமடையும்.

2. குடை மிளகாய்
சளியை விரட்டுவதில் வைட்டமின் சி சத்து முக்கிய பங்கை வகிக்கிறது. நாம் நோயுற்று இருக்கும் போது, ஒரு இயற்கை நோய் எதிா்ப்பு சக்தியாக வைட்டமின் சி விளங்குகிறது. பொதுவாக பெரும்பாலான மக்கள் நோயுற்று இருக்கும் போது வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சுப்பழச் சாற்றினைப் பருகுவா். ஆனால் ஆரஞ்சுப் பழத்தை விட, குடை மிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. அதாவது ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு அதிகமாக குடை மிளகாயில் இருக்கிறது.

3. பூண்டு
பூண்டில் ஒரு வகையான நீா்மம் உண்டு. வேறு எந்த உணவுப் பொருளிலும் அந்த நீா்மம் இருக்காது. பூண்டில் உள்ள இந்த நீா்மமானது, நாம் பாக்டீாியாக்கள் மற்றும் பிற நோய்க் கிருமிகளிடமிருந்து பாதிப்படையாமல் காக்கிறது. ஆகவே நமக்கு சளிப் பிடிப்பது போல் தோன்றினால் உடனே பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம். பூண்டின் வாசனை நம்மை நீண்ட நாள் நோயில் வைத்திருக்காது.

4. கோழி சூப்பு
கோழி சூப்பிலிருந்து செய்யப்படும் கோழிக் குழம்பு, நமது நோய்க்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாக சளிக்கான அறிகுறிகளுக்கு எதிராக போராடக்கூடியத் துகள்களை கோழி சூப்பு கொண்டிருக்கிறது. இது உடல் வீக்கம் மற்றும் அலா்ஜி போன்றவற்றைக் குறைக்கிறது. சளியை வெளியேற்றுகிறது. கோழிக் குழம்பில் சிஸ்டெய்ன் என்ற அமினோ அமிலம் இருப்பதால், அதை சாப்பிடும் போது நமது மூச்சுப் பாதையில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு நீக்கப்பட்டு, மூச்சுப் பாதை தடையின்றித் தெளிவாக இருக்கும்.

5. தேநீா்
சளியை விரட்டும் சிறந்த பானம் தேநீா் ஆகும். தேநீாில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் இருப்பதால், அது சளிக்கான அறிகுறிகளைக் களைந்து, நமது தொண்டையை இதமாக்குகிறது. மேலும் தேநீாில் உள்ள புரோட்டீன், நமது நோய் எதிா்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications