Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மாதவிடாய் கோளாறை சரிப்படுத்தும் உணவுகள் எவை தெரியுமா?
மாதவிடாய் சீராக வருவது ஒரு பெண்ணின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை குறிக்கிறது. இது வெறும் கருமுட்டை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. உடலில் பல இயங்களுக்கு தேவையான உறுப்புக்களின் ஆரோக்கிய குறியீடு.
28 நாட்கள் சுழற்சியில் கருப்பையில் ஒரே ஒரு முட்டை உருவாகி அது கருவுறுதலுக்காக தசைகளை இறுக்கி காத்திருக்கும்போது, அது நடைபெறாமல்போகும் சமயத்தில் உண்டாகும் தளர்வால் உதிரப்போக்கு உண்டாகிறது.
இதை மாதவிடாய் என்று சொல்கிறோம். இந்த சுழற்சி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் மேற்பார்வையில்தான் நடைபெறும்.

மாதவிடாய் சரியாக இந்த 28 நாட்கள் சுழற்சியில் உருவாகிறது. இவ்வாறாக மாதம் ஒரு முறை மாதவிடாய் வந்தால் எப்பெண்ணின் கருப்பை நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள்.
ஆனால் மாதவிடாய் வராது போனால் அல்லது முறையில்லாமல் மாறி மாறி வந்தால் கருப்பை, முட்டை, ஹார்மோன் அகிய்வற்றில் ஏதாவ்து பாதி உண்டாகியிருக்கக் கூடும்.
இங்கே சொல்லப்பட்டிருக்கும் உணவுகள் கர்ப்பப்பையை பலப்படுத்தி மாதவிடாயை நேர்ப்படுத்தும். தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.

பப்பாளிக் காய் :
பப்பாளிக் காய் கர்ப்பப்பையை பலப்படுத்தும். தசைகளுக்கு வலிமை தந்து மாதவிடாயை ஏற்படுத்தும். பப்பாளிக்காயை ஜூஸாகவும் அல்லது பொறியல் போலவும் எடுத்துக் கொள்ளலாம்.

பாகற்காய் :
பாகற்காய் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டும். சில வாரங்களுக்கு தினம் ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து பாருங்கள். மாதவிடாய் சீராகும்.

கற்றாழை :
கற்றாழையின் சதைப் பகுதியை நன்றாக பலமுறை கழுவி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது மாதவிடாய் கோளாறை சரிப்படுத்தி கர்ப்பப்பையை ஆரோக்கியப்படுத்தும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :
ஆப்பிள் சைட வினிகர் மதவிடாயை பிரச்சனையை சரிப்படுத்தும் சிறந்த மருந்தாகும். 1- 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் குடித்து பிரச்சனை சரியாகும்.

பட்டை :
பட்டை கர்ப்பப்பையை வலுவாக்கும். மாதவிடாயை சீர்படுத்தும். தினமும் பாலில் 1 ஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து குடியுங்கள். மாதவிடாய் கோளாறு குணமாகும்.

சோம்பு :
ஒரு ஸ்பூன் சோம்பை ஒரு டம்ளர் நீரில் போட்டு முந்தைய இரவில் ஊற விடுங்கள். மறு நாள் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது நல்ல பலனைத்தரும்.



Click it and Unblock the Notifications











