Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மனப்பதட்டத்தை குணமாக்கும் உணவுகளைத் தெரியுமா?
மனப்பதட்டம் என்பது இன்றைய உலகில் அதிகரித்து வருகின்றது. இயற்கையான சூழ் நிலைகளில் யாரும் வளர்வது கிடையாது.
முற்றிலும் ஒரு செயற்கைத்தனமான உறவுகளிலும், சுற்றுபுறத்திலும் வாழ்வது வேலை அழுத்தம், பொருளாதார நிலைமை ஆகியவற்றுடன் போட்டி போட்டு மன அழுத்தத்தை உண்டு பண்ணுகிறது. இதனால் அதிக மனப்பதட்டம், நிம்மதியின்மை என எப்போது ஏதாவது இழந்தது போன்ற சூழ் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வெயிலையும் மழையையும் ரசிக்காமல் நான்கு சுவற்றுக்குள் முடங்காமல் வெளியே வரவேண்டும். மனிதர்களோடும், இயற்கையான பசுமையான காட்சிகளையும் பார்த்தால்,மன இறுக்கம் குறையும்.
அதோடு உணவிற்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மசாலா நிறைந்த காரமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு கோபம் இயற்கையாகவே அதிகமாக வருவதுண்டு. அதேபோல் காரமற்ற உணவுகள் மனதை சாந்தமாகவே வைத்திருக்கும்.
வெள்ளி , செவ்வாய்களில் அசைவ உணவையும், சிலர் வெங்காயம், போன்ற காரமான உணவும் பொருளையும் தவிர்ப்பதற்கு காரணம் அமைதியான மனதை பெறுவதற்காக மட்டுமே. இதுபோல் நல்ல உணர்வுகளைத் தரும் உணவுகளை கொஞ்சம் கவனிப்போம்
முழு தானியங்கள் :
முழு தானியங்களில் மெக்னீசியம் அதிக அளவு உள்ளது. இவை நரம்புகளை சாந்தப்படுத்துகிறது. அதேபோல் அவைகளிலிருக்கும். ட்ரிப்டோஃபேன் மனதை அமைதிப்படுத்தும் காரணியாகும்.
கடற்பாசி :
கடற்பாசியிலும் மெக்னீசியம் மற்றும் ட்ரிப்டோஃபேன் அதிகமாக உள்ளது. மேலும் முழுதானியங்களான கோதுமை போன்றவை சிலருக்கு அலர்ஜியை தரும். அதில் குளுடன் அதிகமாக இருப்பதால் அலர்ஜி உண்டாகும்.
அவ்வாறு பிரச்சனை இருப்பவர்கள் கடற்பாசியை உண்டால், மிகவும் நல்லது. கொதுமையிலிருக்கும் சத்துக்களும் கிடைக்கும். மனத்தளர்ச்சியும் தடுக்கும்.
ப்ளூ பெர்ரி :
ப்ளூ பெர்ரி பழங்களில் ஃபைடோ சத்துக்கள் அதிகம். அவை மனப்பதட்டத்தை குறைப்பவை. மனம்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். தேக ஆரோக்கியத்தையும் , மன ஆரோக்கியத்தையும் ஒருசேர பெறலாம்.
பாதாம் மற்றும் சாக்லேட் :
பாதாமில் ஜிங்க் மற்றும் இரும்பு சத்து உள்ளது. இவை மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும்.
சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்த்தை உண்டாக்கும் ஹார்மோனான கார்டிசாலை சம நிலை படுத்தி, ஒழுங்காக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
















