Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மனப்பதட்டத்தை குணமாக்கும் உணவுகளைத் தெரியுமா?
மனப்பதட்டம் என்பது இன்றைய உலகில் அதிகரித்து வருகின்றது. இயற்கையான சூழ் நிலைகளில் யாரும் வளர்வது கிடையாது.
முற்றிலும் ஒரு செயற்கைத்தனமான உறவுகளிலும், சுற்றுபுறத்திலும் வாழ்வது வேலை அழுத்தம், பொருளாதார நிலைமை ஆகியவற்றுடன் போட்டி போட்டு மன அழுத்தத்தை உண்டு பண்ணுகிறது. இதனால் அதிக மனப்பதட்டம், நிம்மதியின்மை என எப்போது ஏதாவது இழந்தது போன்ற சூழ் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வெயிலையும் மழையையும் ரசிக்காமல் நான்கு சுவற்றுக்குள் முடங்காமல் வெளியே வரவேண்டும். மனிதர்களோடும், இயற்கையான பசுமையான காட்சிகளையும் பார்த்தால்,மன இறுக்கம் குறையும்.
அதோடு உணவிற்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மசாலா நிறைந்த காரமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு கோபம் இயற்கையாகவே அதிகமாக வருவதுண்டு. அதேபோல் காரமற்ற உணவுகள் மனதை சாந்தமாகவே வைத்திருக்கும்.
வெள்ளி , செவ்வாய்களில் அசைவ உணவையும், சிலர் வெங்காயம், போன்ற காரமான உணவும் பொருளையும் தவிர்ப்பதற்கு காரணம் அமைதியான மனதை பெறுவதற்காக மட்டுமே. இதுபோல் நல்ல உணர்வுகளைத் தரும் உணவுகளை கொஞ்சம் கவனிப்போம்
முழு தானியங்கள் :
முழு தானியங்களில் மெக்னீசியம் அதிக அளவு உள்ளது. இவை நரம்புகளை சாந்தப்படுத்துகிறது. அதேபோல் அவைகளிலிருக்கும். ட்ரிப்டோஃபேன் மனதை அமைதிப்படுத்தும் காரணியாகும்.
கடற்பாசி :
கடற்பாசியிலும் மெக்னீசியம் மற்றும் ட்ரிப்டோஃபேன் அதிகமாக உள்ளது. மேலும் முழுதானியங்களான கோதுமை போன்றவை சிலருக்கு அலர்ஜியை தரும். அதில் குளுடன் அதிகமாக இருப்பதால் அலர்ஜி உண்டாகும்.
அவ்வாறு பிரச்சனை இருப்பவர்கள் கடற்பாசியை உண்டால், மிகவும் நல்லது. கொதுமையிலிருக்கும் சத்துக்களும் கிடைக்கும். மனத்தளர்ச்சியும் தடுக்கும்.
ப்ளூ பெர்ரி :
ப்ளூ பெர்ரி பழங்களில் ஃபைடோ சத்துக்கள் அதிகம். அவை மனப்பதட்டத்தை குறைப்பவை. மனம்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். தேக ஆரோக்கியத்தையும் , மன ஆரோக்கியத்தையும் ஒருசேர பெறலாம்.
பாதாம் மற்றும் சாக்லேட் :
பாதாமில் ஜிங்க் மற்றும் இரும்பு சத்து உள்ளது. இவை மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும்.
சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்த்தை உண்டாக்கும் ஹார்மோனான கார்டிசாலை சம நிலை படுத்தி, ஒழுங்காக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




