Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சர்க்கரை நோயாளிகளுக்கு பற்களிலும் ஆபத்து இருக்கிறது தெரியுமா!
ரத்தச் சர்க்கரையளவு அதிகமாக இருப்பவர்களுக்கு பற்களில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?
சர்க்கரை நோய் பிரச்சனை இருக்கிறதா உங்களுக்கு? ஆளைக் மெல்லக் கொல்லும் அந்த நோய் குறித்த அச்சம் எல்லாருக்கும் இருக்கிறது. நம் ரத்தத்தில் சர்க்கரையளவு அதிகரித்தால் ஏற்படுகிற தொல்லைகளுக்கு பஞ்சமிருக்காது.
இதுவரை மாரடைப்பு ஏற்படும், புண் வந்தால் ஆறாது, முற்றிப்போனால் காலையே எடுத்து விடுவார்கள் என்பது வரை தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும் என்று தெரியுமா?

ரத்த ஓட்டம் :
பற்களை வலுவாக பிடிக்க ஈறுகளுக்கு ரத்த ஓட்டம் அவசியம். உங்களின் ரத்தச் சர்க்கரையளவு அதிகமாக இருந்தால் இந்த ரத்த ஓட்டம் குறைந்திடும். இதனால் ஈறுகள் வலுவிழந்து பாக்டீரியா தொற்று ஏற்படும்.

வாயில் வறட்சி :
சர்க்கரையளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நா வறட்சி அடிக்கடி ஏற்படும், இதனால் ஈறுகளில் உண்டான பாக்டீரியாத் தொற்று மிக வேகமாக பரவும். அதோடு எச்சில் சுரப்பும் குறைவாக இருக்கும் என்பதால் பற்களின் வலுவிற்கு அவை கேள்விக்குறியாக்கிடும்.

கேவிட்டீஸ் :
நாம் சாப்பிடும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களினால் ஏற்கனவே பற்களில் மற்றும் வாயில் பாக்டீரியா அதிகமாக இருக்கக்கூடும். இந்நேரத்தில் சர்க்கரையளவு அதிகமாகவும் இருந்தால்.... அதாவது உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அது பற்களில் கேவிட்டீஸ் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திடும்.

அமிலம் :
ஸ்டிக்கி கோட்டிங் ஒன்று பற்களின் மேல் உருவாகும். பெரும்பாலும் அவற்றை நாம் கண்டு கொள்வதில்லை. நாளடைவில் அவை பற்கள் முழுவதையும் படர்ந்து பற்களின் மேலிருக்கிற எனாமலை குலைத்திடும். இதனால் பற் சிதைவுஏற்படும். சர்க்கரையளவு அதிகரிக்க இந்த அமிலத்தின் அளவும் அதிகரிக்கும். இதனை நாம் மாதக் கணக்கில் கண்டு கொள்ளாமல் விட்டால் பற்களில் பற்குழி, பற்சிதைவு ஆகிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஜிங்கிவிட்டீஸ் :
சர்க்கரை நோயின் முதல் வேலையே உங்களுடைய நோய் எதிர்ப்புத் திறனை குலைப்பது தான். அதீதச் சர்க்கரையினால் உருவாகும் பற்களில் படரும் ப்ளாக்யூ பற்களின் ஈறுகளையும் தாக்க ஆரம்பிக்கும்.
இதனால் சில நேரங்களில் ஈறுகளில் ரத்தக்கசிவு , ஈறு வீங்குதல் முதலான பிரச்சனைகள் ஏற்படும். இதனைத்தான் ஜிங்கிவிட்டீஸ் என்கிறார்கள்.

Periodontitis :
ஜிங்கிவிட்டீஸை தொடர்ந்து கண்காணிக்காமல், முறையான சிகிச்சைகளை எடுக்காமல் விட்டால் அதன் அடுத்தக்கட்டம் தான் இந்த பாதிப்பு. இவை பற்களை தாங்கிப் பிடித்திருக்கும் நுண்ணிய திசுக்களை எல்லாம் அழித்திடும். அதோடு இவை தாடை எலும்பைக்கூட நொறுக்கும் வீரியம் படைத்தது.

சர்க்கரையளவை அதிகரிக்கும் :
Periodontitis பாதிப்பு உண்டானால் உங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்ன தெரியுமா? இவை உங்கள் ரத்தச் சர்க்கரையளவை தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருப்பது தான்.
இதனால் உங்களால் ரத்தச் சர்க்கரையளவை எளிதாக கட்டுக்குள் கொண்டு வர முடியாது.

candidiasis :
வாயில் வளரக்கூடிய ஒரு வகை ஃபன்கஸ். இவை பல் ஈறுகள்,நாக்கு, உள்ளன்னம் மேலன்னம் ஆகிய பகுதிகளில் உண்டாகும். ஆரம்பத்தில் அதீத சூட்டினால் உண்டானது என்று தான் நினைப்பார்கள்.இரண்டு நாட்களில் அவை குறையவில்லையெனில் உங்களது ரத்தச் சர்கக்ரையளவை பரிசோதித்திடுங்கள்.

xerostomia :
ஆரம்பத்தில் பார்த்தது தான் இது. அதீத நாவறட்சி உண்டாகும். இதனால் பாக்டீரியாவை அழிக்க முடியாமல் தவிப்பீர்கள். வறட்டு இருமல் இருக்கும், எந்த உணவைச் சாப்பிட்டாலும் கசப்பாகவே இருக்கும், உணவை மெல்லுவதில்,முழுங்குவதில் சிக்கல்கள் இருக்கும். பேசுவதில் தடுமாற்றமிருக்கும், உதட்டில் கூட வெடிப்பு உண்டாகும்.

எரிச்சல் :
இதனை ஓரல் பர்னிங் என்று அழைக்கிறார்கள். காரணமேயில்லாமல் வாயில் அதீத எரிச்சல் உண்டாகும். இவை நீங்கள் காரமான உணவு சாப்பிட்டு விட்டதாகவோ அல்லது தெரியாத்தனமாக நாக்கை கடித்திருப்பேன் என்றோ நினைக்காதீர்கள். உங்கள் உடலின் ரத்தச் சர்க்கரையளவு அதிகரித்ததால் தான் இந்த எரிச்சல்.



Click it and Unblock the Notifications