Just In
- 8 min ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 2 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 3 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 4 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
Don't Miss
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வீட்டுலையே செய்யக்கூடிய இந்த 2 கிரீம்கள் உங்க சருமத்தை பளபளன்னு மின்ன வைக்குமாம் தெரியுமா?
ரோஸ் வாட்டர் மிகவும் விரும்பப்படும் சரும பராமரிப்பு பொருட்க்களில் ஒன்றாகும். அதன் இயற்கையான டோனிங் பண்புகள் காரணமாக இது புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்ல, மணம் கொண்டதாகவும் இருக்கும்.
நீங்கள் தூங்கும் முன் தோல், முடி மற்றும் பாதங்களை ஆரோக்கியமாக வைக்க பராமரிப்பு முறையை செய்வது நல்லது. உங்கள் சருமத்திற்கு என்று வரும்போது, அதற்கு இன்னும் கூடுதல் கவனம் தேவை. என்றும் இளமையாக இருக்க நீங்க சில சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும். அவை, உங்கள் சருமத்தை பாதுகாக்கும் மற்றும் பொலிவாக்க உதவும். தோல் பராமரிப்பில் ஈடுபட விரும்புபவராக இருந்தால், வீட்டில் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நைட் க்ரீமை முயற்சி செய்யுங்கள். சந்தையில் வாங்கும் கிரீம்களை தவிர்த்துவிட்டு, பளபளப்பான சருமத்திற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
நம் சருமம் தூசி, வெப்பம், சூரிய ஒளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், இரவு நேர தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றுவது மிக முக்கியம். இவை உங்கள் சருமத்தை பாதுகாத்து ஒளிரச் செய்ய உதவும். நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் சருமத்தை பளபளக்க உதவும் இரண்டு இரவு கிரீம்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
அலோ வேரா ஜெல் நைட் கிரீம்
கற்றாழை உங்கள் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இந்த நைட் கிரீம் ஒரே இரவில் உங்கள் சருமத்தை பொலிவாக மாற்றும். ஏனெனில், இந்த கிரீமில் பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை உங்கள் சருமத்தை ஒளிரச் செய்வதோடு, பல்வேறு நன்மைகளை சருமத்திற்கு வழங்குகின்றன. மேலும், இந்த கிரீம் உங்கள் சருமத்தில் உள்ள கறைகளை குறைக்க உதவும் மற்றும் இந்த க்ரீமில் ரோஸ் வாட்டர் இருப்பதால் உங்கள் சருமத்திற்கு பளபளப்பு கூடும். இரவில் உங்கள் முகத்தைக் கழுவிய பின் இந்த கிரீமை பயன்படுத்த வேண்டும். நைட் க்ரீமை சிறிதளவு எடுத்து வட்ட இயக்கத்தில் குறைந்தது 2 நிமிடங்களுக்கு முகத்தில் மசாஜ் செய்யவும்.
கிரீம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
அலோ வேரா ஜெல்- 2 முதல் 3 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர்- 1 முதல் 2 தேக்கரண்டி
பாதாம் எண்ணெய்- 1 தேக்கரண்டி
லாவெண்டர் எண்ணெய்- 7- 8 சொட்டுகள்
செய்முறை
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்க்கவும். அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது, உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கும் நைட் கிரீம் தயார். அதை ஒரு கொள்கலனில் சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தவும்.
ரோஸ் வாட்டர் மற்றும் கோகோ பட்டர் நைட் கிரீம்
ரோஸ் வாட்டர் மிகவும் விரும்பப்படும் சரும பராமரிப்பு பொருட்க்களில் ஒன்றாகும். அதன் இயற்கையான டோனிங் பண்புகள் காரணமாக இது புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்ல, மணம் கொண்டதாகவும் இருக்கும். நீங்கள் அதில் கோகோ வெண்ணெயை சேர்க்கும் போது, இந்த நைட் கிரீம் கலவை உங்கள் சருமத்திற்கு சரியான நீரேற்றம் மற்றும் மினியேட்டரைசேஷன் கொடுக்கும். இந்த நைட் கிரீமில் பாதாம் எண்ணெயும் இருப்பதால், இது கரும் புள்ளிகளைக் குறைக்கும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், இந்த கிரீமைப் பயன்படுத்துங்கள்.
கிரீம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
கோகோ வெண்ணெய் - 2 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 2 முதல் 3 தேக்கரண்டி
தேன் -1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய்- 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் கோகோ பட்டர் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் சூடாக்கவும். பின்னர், இந்த கலவையை ஆறவைக்கவும். ஆறியதும் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இப்போது கிரீம் தயாராக உள்ளது. இந்த கிரீமை கொள்கலனில் சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். நீங்கள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதைப் போலவே, தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தைக் கழுவி உலர்த்திய பின் இந்த கிரீமை பயன்படுத்துங்கள்.