Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தேஜஸான முகம் பெற என்ன செய்ய வேண்டும்?
அழகான முகம் பெற பார்லருக்கு செல்ல வேண்டியதில்லை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் பாட்டி வைத்தியத்தை செய்து பாருங்கள். பலன் தந்ததா என எங்களிடம் பகிருங்கள்.
சிலருக்கு எல்லா லட்சணமும் இருந்தாலும் ஏதோ ஒன்று குறையக தென்படும். இன்னும் சிலருக்கு முகத்தில் ஏதோ ஒரு களை தென்படும்.

துறுதுறுப்பாகவோ, அல்லது ஜொலிப்பதாகவோ ஏதோ ஒரு அழகு கூடும்.
இதற்கு நிச்சயம் வெளிப்பூச்சுகளால் அழகை அதிகரிக்க செய்ய முடியாது. பின் என்ன செய்ய வேண்டும்? இன்னும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முகத் தசை பயிற்சி :
முகத் தசைகளை சுருக்கி, விரித்து, இடம், வலம் என வாயை இழுத்து செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் பாயும். சுருக்கங்கள் வராது. முகத்தில் புதிதாய் அழகு தென்படும்.

கேரட் :
தினமும் அல்லது வாரம் 4 நாட்கள் காலையில் ஒரு கேரட் சாப்பிட்டு வாருங்கள். உடலில் மினுமினுப்பு அதிகரிக்கும்.

காலையில் சாப்பிட வேண்டிய பழம் :
தினமும் காலையில் பழம் சாப்பிட்டால் இளமை அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சு, ஆப்பிள்,பப்பாளீ சாப்பிட்டு பாருங்கள். முகத்தில் ஒரு தேஜஸ் உருவாவதை பார்ப்பீர்கள்.

சுத்தமான சருமம் :
கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, மருக்கள், கருமை எல்லாம் மறைந்து போய் முகம் பளபளக்கும்.

15 நாட்களுக்கு ஒருமுறை :
முல்தானி மட்டியுடன் பனீர் மற்றும் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் பூசினால் முகச் சதை தொங்காது. இளமையான சுருக்கமில்லா முகம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications