அழகிய தொடைகள் இல்லையா..? கொழுப்பு கட்டிகள் அவற்றையெல்லாம் கெடுத்துவிடுகிறதா...? இதோ அவற்றை குணப்படு

மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளது. சில உடல் ரீதியான பிரச்சனைகள், சில மன ரீதியான பிரச்சனைகள் என மாறி மாறி வந்து கொண்டேதான் இருக்க செய்கிறது. இது எதார்த்தமே...! இருப்பினும் இதையெல்லாம்

By Hari Priya D

பிரச்சனை..பிரச்சனை..!! மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளது. சில உடல் ரீதியான பிரச்சனைகள், சில மன ரீதியான பிரச்சனைகள் என மாறி மாறி வந்து கொண்டேதான் இருக்க செய்கிறது. இது எதார்த்தமே...! இருப்பினும் இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய கடமை நம்மிடமே உள்ளது. மன ரீதியான பிரச்சனைகளை சரி செய்ய முதலில் வழி செய்வது ஆரோக்கியமான உடலே.

health

மனித உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் வர கூடும். உட்காரும் இடத்திலே பிரச்சனை என்றால் அதை நாம் என்னவென்று சொல்லுவது...' ஆம்...தொடையில் ஏற்படும் கொழுப்பு கட்டிகளை தான் சொல்கிறேன். நாம் சிறிது நேரம் ஓய்வெடுக்க கூட முடியாமல் இந்த கொழுப்பு கட்டிகள் பாடாய் படுத்தி விடுகிறதா..? கவலையை விட்டு தள்ளுங்கள்..! இதனை சரி செய்ய நம் வீட்டு வைத்தியத்திலே பல வழி முறைகள் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பு கட்டிகள் வர காரணம் :-

கொழுப்பு கட்டிகள் வர காரணம் :-

நமது தோளின் உட்புறத்தில் அதிக கொழுப்புகள் சேர்ந்தாலோ , அல்லது குறிப்பிட்ட இடத்தில் ரத்த ஓட்டம் குறைந்தாலோ இப்படிப்பட்ட கட்டிகள் வர கூடும். இந்த கட்டிகள் முதலில் உள்ளுக்குள்ளே இருந்து கொண்டு பிறகு போக போக பெரியதாக மாறும். பின்பு வீக்கமடைந்து கட்டியாக வெளியில் தெரிய ஆரம்பிக்கும். இந்த கட்டிகள் பெரியதாக மாறுவதற்கு பாக்டீரியாக்களே காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் இது அரிப்பை ஏற்படடுத்தி உடைந்து சீழ் போன்ற ஒன்றை உருவாக்கும்.

குணப்படுத்தும் முறைகள் :-

குணப்படுத்தும் முறைகள் :-

மஞ்சள் :-

இயற்கையாகவே மஞ்சள் ஒரு அற்புதமான கிருமி நாசினி. எந்த இடத்தில் காயங்கள் ஏற்பட்டாலும் இவை அவற்றை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. சிறிதளவு மஞ்சள் தூளை எடுத்து கொண்டு அதனை மிதமான சுடு தண்ணீரில் மிக்ஸ் செய்து கொள்ளவும். இதற்கு பதிலாகவும் சிறிதளவு வினிகரை எடுத்து கொண்டு அதனை மில்க் கிரீமுடன் சேர்த்து கொழுப்பு கட்டிகள் மேல் 30 நிமிடம் வரை தடவி வர விரைவில் அவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 க்ளாஸ் பாலுடன் சேர்த்து தினமும் 2 வேலை குடியுங்கள். இது கொழுப்பு கட்டிகளின் வீக்கைத்தையும் வலியையும் குறைக்க வல்லது.

வேப்பிலை :-

வேப்பிலை :-

ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட இந்த வெப்பில்லை நம் தோலிற்கு பலவித நன்மைகளை கொடுக்க வல்லது. இது தோலை கிருமிகளிடம் இருந்து காப்பது மட்டுமின்றி நமது தொடையை மென்மையாகவும் மாற்றும். கை நிறைய வேப்பிலையை எடுத்து கொண்டு அதனுடன் மஞ்சளை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு 30 நிமிடம் தொடையில் ஏற்பட்டுள்ள கொழுப்பு கட்டுகளின் மேல் தினமும் தடவி வர, ஒரு வாரத்திற்குள் வீக்கம் குறைந்து வலி நீங்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர் :-

ஆப்பிள் சிடர் வினிகர் :-

சமமான அளவில் ஆப்பிள் சிடர் வினிகரையம் தேன்னும் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை 15 நிமிடம் கட்டிகள் உள்ள இடத்தில் வைத்து வந்தால் கொழுப்பு கட்டிகள் மறையும். அல்லது ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அதனை கட்டிகள் உள்ள இடத்தில் தினமும் 3 முறை தடவுங்கள். இது கட்டியை சிரியதாக்கி பின் மறைய செய்யும்.

டூத் பேஸ்ட் :-

டூத் பேஸ்ட் :-

நமக்கு பொதுவாவே முக பருக்கள் வருவது சகஜம். இந்த டூத் பேஸ்ட் அந்த முக பருக்களையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதே போன்று சிறிதளவு டூத் பேஸ்ட் எடுத்து கொண்டு அதனை கொழுப்பு கட்டிகள் உள்ள இடத்தில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து அதனை கழுவி விடுங்கள்.பிறகு மீண்டும் அதனை அப்ளை செய்யுங்கள். இவ்வாறு ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை செய்து வர இந்த கட்டிகள் விரைவில் குணமடையும்.

பூண்டு :-

பூண்டு :-

வீட்டு வைத்தியத்தில் முதல் இடம் என்றால் அது பூண்டிற்கு தான் கொடுக்க வேண்டும். ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட இந்த பூண்டை 2 பற்கள் எடுத்து கொண்டு அதனை நசுக்கி பின்பு அதில் உள்ள சாற்றை மட்டும் கட்டிகள் உள்ள இடத்தில் தினமும் 2 முறை தடவி வர இந்த கட்டிகள் வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். அல்லது சிறிதளவு மஞ்சள் தூளை பூண்டு சாற்றுடன் சேர்த்து அந்த கலவையை கொழுப்பு கட்டிகள் இருகின்ற இடத்தில் பூசுங்கள். இது விரைவில் குணப்படுத்தும்.

வெங்காயம் :-

வெங்காயம் :-

வெங்காயம் ஒரு நல்ல கிருமி நாசினி. இது பல உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தவல்லது. தொடையில் கொழுப்பு கட்டிகள் நிறைந்த இடத்தில் வெங்காயத்தின் சாற்றை தடவி வர, இது எரிச்சலை குறைத்து வீக்கத்தையும் குறைத்து விடும். அல்லது, ஒரு வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி அதனை கொழுப்பு கட்டிகள் உள்ள இடத்தில் துணியை கொண்டு கட்டிவிட்டு 2 மணி நேரம் கழித்து தண்ணீரில் நனைத்த காட்டன் துணியால் அதனை தொடைத்து வர கட்டிகள் தொடையை விட்டு ஓடிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion