Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
முகப்பருக்களுக்கு குட்பை சொல்லனும்னா வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடிச்சு பாருங்க!!
முகப்பருக்களை தடுக்கவும், குணமாக்கவும், ஹெர்பல் ஆவி செய்வதன் மூலம் சரிப்படுத்த முடியும். ஹெபல் ஆவி தயாரிக்கும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது
நமது சரும துவாரங்களில் அழுக்குகள் இறந்த செலக்ள் தங்கி வெளிவராம தொற்று உண்டாகி அதனால் ஏற்படுவதுதான் முகப்பருக்கள். சரும அழகையே கெடுத்துவிடும். இதனால் பலரும் அவதிக்குளாவதுண்டு. இந்த பிரச்சனையை சரிப்படுத்த பலவித குறிப்புகளை பயன்படுத்தி எதுவும் சரிவராமலிருக்கிறதா? உங்க சாய்ஸ் இதுவா கூட இருக்கலாம்.

ஹெர்பல் ஆவி என்பது மிகவும் பவர்ஃபுல்லான வழிதான். சூடான நீரை விட அதன் ஆவிக்கு சருமத்தை ஊடுடுவும் சக்தியுண்டு. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்ளும் எளிய வழிதான் இங்கே சொல்லப்பட்டிருகிறது. தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

தேவையானவை :
மஞ்சள் பொடி
பட்டை பொடி
க்ரீன் டீ
நீர்

ஸ்டெப்-1 :
இந்த ஆவி பிடிப்பதற்கு முன் உங்கள் முகத்தை நன்றாக கழுவி பருத்தித் துணியால் துடைத்திடுங்கள். பின் 1 லிட்டர் அளவு நீரை கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப்-2 :
பின் 1 ஸ்பூன் மஞ்சள் பொடி, 4 பட்டை மற்றும் 1 ஸ்பூன் அளவு க்ரீன் டீயை கொதிக்கும் நீரில் போட வேண்டும்.

ஸ்டெப்-3 :
பின்னர் அடுப்பை அனைத்து ஒரு ஸ்பூனால் நீரை நன்றாக கலக்குங்கள். இந்த நீர் நிறம் மாறி அடர் மஞ்சள் நிறத்திற்கு வரும்.

ஸ்டெப் - 4 :
இந்த நீரில் முகத்தை நன்றாக மூடி ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்வதால் சரும துவாரங்கள் திறந்து இந்த மூலிகைகளின் குணங்கள் ஊடுருவும்.

சருமத்தின் தன்மை :
உங்களுக்கு வறண்ட சருமம் என்றால் 8 நிமிடங்கள் போதுமானது. எண்ணெய் சருமம் என்றால் 15-20 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். சூடு ஆறியதென்றால் திரும்பவும் சூடு வைத்து ஆவி பிடிக்கலாம்.

நன்மைகள் :
மஞ்சள் கிருமிகளின் மீது செயல்புரிந்து அவற்றை அழிக்கும். க்ரீன் டீ சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கும். தேவையான போஷாக்கை தரும். பட்டை முகப்பரு, மற்றும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். இந்த மூன்றையும் நீரில் கலந்து ஆவியாக பிடித்தால் அற்புத பலன்களை பெறலாம்.



Click it and Unblock the Notifications