Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள்
உங்கள் சரும பிரச்சனையை போக்கும் சமையலறை பொருட்கள்!!
இயற்கையான பொருட்களே உங்கள் சருமத்திற்கு கேடு விளைவிக்காது. சரும அழகையும் கூட்டும். எந்த வித பிரச்சனைகளையும் போக்க உங்கள் சமையலறையில் கட்டாயம் இருகக் வேண்டிய பொருட்கள் இவைதான்.
நம்மை அழகு படுத்தவோ அல்லது சரும பிரச்சனைகளை சரிபண்ணவோ அடிக்கடி கடைகளிலோ அல்லது பார்லரிலோ சென்று அழகு படுத்திக் கொள்வதை விட எப்போதும் வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு சரும பாதிப்புகளை சரி செய்யலாம்.

வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது சில நிமிடங்களில் உங்கள் அழகை பிரச்சனையை சரிபப்டுத்திம் கொள்ளலாம். நேரமும் குறைவு. பலனோ அற்புதம். எவ்வாறு என பார்க்கலாம்.

கிராம்பு நீர் :
தேவையானவை :
நீர் - அரை லிட்டர்
கிராம்பு - 7
கற்பூரம் - 1 சிட்டிகை
புதினா இலை - ஒரு கைப்பிடி

கிராம்பு நீர் :
செய்முறை :
நீரில் கிராம்பு கற்பூரம் , புதிய புதினா இலைகளை போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வையுங்கள். பின்னர் ஆற வைத்து வடிகட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட வேண்டும். இந்த நீரை தினமும் காலை மாலை எடுத்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள். எண்ணெய் வழியாது. முகப்பரு மறையும். முகம் பளபளப்பாகும்.

பாதாம் பொடி :
பாதாம் பொடியுடன் உருளைக் கிழங்கு சாறை கலக்கி முகத்தில் தடவுங்கள். இதனால் சருமத்தில் இறந்த செல்கள் அழுக்குகள் மறைந்து முகம் பளபளக்கும். பலவித பலன்களை அளிக்கக் கூடியது. முயன்று பாருங்கள்.

வெள்ளரிக்காய் :
வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு மிகவும் தேவைப்படும். வெள்ளரிக்காய் சாறு எடுத்து இரவு தூங்கப்போகுமுன் பூசி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்தால் அன்றையா நாள் முழுவதும் சேர்த்த அழுக்கு, இறந்த செல்கள் எல்லாம் அகன்று, உங்கள் சருமத்தை லேசாக்கும். வெளுக்கச் செய்யும். சுத்தமான சருமத்தை தரும்.

முட்டை மற்றும் மைசூர் பருப்பு :
முட்டையின் வெள்ளைக் கருவுடன் மசூர் பருப் பொடி மற்றும் பால் கலந்த் முகத்தில் மாஸ்க் போல் போடவும் நன்றாக இறுகிப் பிடிக்கும்போது கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications