Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒட்டிய கன்னங்கள் பூசிய கன்னங்களாக கிடைக்க என்ன செய்யலாம்?
குளிர்காலத்தில் காற்றில் நிலவும் குளிர்ந்த நிலையால், நமது உடலிலிருந்து இயற்கையாக சுரக்கும் எண்ணெய் சுரப்பது குறையும். இதனால் வறட்சி உண்டாகி தோலில் எரிச்சல், சுருக்கம், வெண்மை ஆகியவை உண்டாகும்.
குளிர்காலத்தில் சருமத்தில் ஈரத்தன்மை குறைவதால் தோல் வறண்டு சுருக்கங்கள் வறட்சி உண்டாகும். லேசாக வெள்ளை செதிலாக தோலிருந்து வெளிவருவது மிக அதிக வறட்சியையின் அறிகுறி.
அதோடு கொலஜன் உற்பத்தியும் இந்த சமயத்தில் குறைவதால் கன்னங்கள் ஒட்டி இருப்பவர்களுக்கு இன்னும் ஒடுங்கி அசிங்கமாக இருக்கும்.
குளிர்காலத்தில் உங்கள் சருமம் பாதிக்கப்படாமலிருக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் உபயோகமாக இருக்கும்.
சாமந்தி இதழ்கள் :
சாமந்தி சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும். சாமந்தி இதழ்களை அரைத்து முகத்தில் தடவுங்கள்.
காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தவறாமல் வாரம் இருமுறையாவது இப்படி செய்தால் சருமம் ஈரப்பதம் பெறும்.
தொடர்ந்து செய்தால் கன்னங்கள் ஒட்டிய கன்னங்கள் பூசிய கன்னங்களாக ஜொலிக்கும்.
கடுகு எண்ணெய் :
கடுகு எண்ணெய் உடலிற்கு சூட்டை அளிக்கிறது. குளிர்காலத்தில் கடுகு எண்ணெய் உபயோகிப்பது நல்லது.
பார்லி பொடி 1 ஸ்பூன் எடுத்து அதனுடல் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
சோம்பு மற்றும் தனியா :
சோம்பு , தனியா விதை மற்றும் சீரகம் தலா ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் போட்டு 15 நிமிடம் கொதிக்கவையுங்கள். அதன் பின் ஆற வைத்து வடிகட்டி அந்த நீரினால் முகத்தை கழுவினால் நல்ல பலன்கள் தரும்.
பப்பாளி :
பப்பாளி சரும வறட்சியை தடுக்கிறது. பழுத்த பப்பாளியை முகத்தில் பூசி 5 நிமிடங்களில் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
கற்றாழை :
இதுதான் உங்கள் கூந்தல் மற்றும் சருமத்திற்கான மிகச் சிறந்த பொருள். அனைத்துவித சரும பாதிப்புகளையும் சரி செய்யும். கற்றாழை பசையை கூழ் செய்து சிறிது பால கலந்து முகத்தில் போடுங்கள். காய்ந்ததும் கழுவவும். நல்ல பலனை தரும்.
வாழைப்பழம் :
வாழைப்பழம் 2 ஸ்பூன் அளவு மசித்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் வறட்சி தடுக்கப்படும்.
ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் :
சந்தனத்தை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்து அதனை முகத்தில் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். சந்தனம் வறட்சிக்கு எதிராக போராடும். சரும ஈரத்தன்மையை தக்க வைக்கும்.