Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க..
முகத்தில் அசிங்கமா மேடு பள்ளங்கள் உள்ளதா? அதை மறைக்க இதோ சில அற்புத வழிகள்!
சிலருக்கு முகத்தில் அசிங்கமாக பள்ளங்கள் இருக்கும். இவை ஒருவரின் அழகை படு மோசமாக வெளிக்காட்டும். இப்படி ஒருவருக்கு முகத்தில் உள்ள சருமத்துளைகள் விரிவடைந்து மேடு பள்ளங்கள் வருவதற்கு வயது, ஹார்மோன் சமநிலையின்மை, அதிகப்படியான மேக்கப், தரமற்ற பொருட்களை சருமத்தில் பயன்படுத்துவது போன்றவை தான்.
இப்படி முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை சரிசெய்வதற்கு எந்த ஒரு சரும பராமரிப்பு பொருட்களும் உதவாது. ஆனால் நம் சமையலறையில் உள்ள குறிப்பிட்ட பொருட்கள் நம் சருமத் துளைகளை சுருங்கச் செய்து, மேடு பள்ளங்களை மறைக்கும்.
சரி, இப்போது முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை சரிசெய்ய உதவும் அந்த பொருட்கள் என்னவென்றும், அவற்றை எப்படி பயன்படுத்துவது என்றும் காண்போம்.

ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை 20-30 நொடிகள் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சருமம் இறுக்கமடைந்து, திறந்துள்ள சருமத்துளைகள் மூடப்படும்.

தக்காளி ஸ்கரப்
தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்துளைகள் சுருங்கச் செய்வதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும்.

செய்முறை #1
முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை சர்க்கரையில் தொட்டுக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின்பு அந்த தக்காளி துண்டை சருமத்தில் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் திறந்துள்ள சருமத்துளைகள் மூடப்படுவதோடு, இறந்த செல்களும் முழுமையாக வெளியேற்றப்படும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சருமத்தில் இருக்கும் பிம்பிளை சுருங்கச் செய்வதோடு, விரிவடைந்த சருமத்துளைகளின் அளவு குறையும்.

செய்முறை #1
பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின்பு அந்த பேக்கிங் சோடா கலவையை சருமத்தில் தடவி 30 நொடிகள் மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களுக்கு மிகவும் சென்சிடிவ் சருமம் என்றால் இந்த முறையை தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications











