Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
பாட்டி சொல்லும் மூலிகை வாசனை பொடி- எல்லா சரும பிரச்சனைகளுக்கும் !!
அந்த காலத்தில் மேனி அழகைப் பராமரிக்க நமது பாட்டிகள் மூலிகைகள் கலந்த குளியல் பொடியை தயார் செய்து உபயோகித்தனர்.
இதனால்தான் அவர்களுக்கு சருமம் வயதானாலும் மெருகு குறையாமல் இருப்பதற்கு காரணம். அவைகள் எல்லாவித சரும அலர்ஜிகளை போக்கி, சருமத்தை அழகாக்கின்றன. பொலிவை தருகின்றன.

இது போன்ற பாட்டி குறிப்புகளை நாம் பின்பற்றினால் இந்த மாசுபட்ட சுற்று சூழ் நிலைகளால எவ்வித பாதிப்பும் இல்லாமல் உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம்.
நாம் உபயோகிக்கும் க்ரீம் மற்றும் மற்ற அழகு சாதனங்களால் லட்சக்கணக்கான செல்கள் பாதிப்படைகின்றன. இவை சரும பாதிப்புகளை தருவதோடு, விரைவில் முதுமையான தோற்றம் பெற காரணங்களாகின்றன.
இந்த மூலிகை குளியல் பொடி சருமத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களையும் ரசாயனங்களையும் அகற்றி, பாதிப்படைந்த சருமத்தை சீர் செய்கின்றன.
பாட்டி சொல்லும் மூலிகை குளியல் பொடியை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையானவை :
கஸ்தூரி மஞ்சள் பொடி - அரை கப் அளவு
சந்தனப் பொடி - கால் கப்
கடலை மாவு - அரை கப்
பச்சைப் பயிறு பொடி - 1 கப்
வேப்பிலை பொடி -அரை கப்
கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சைப் பயிறு மற்றும் வேப்பிலையை வெயிலில் காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இவற்றுடன் கடலை மாவு மற்றும் சந்தனத்தை கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை 2 ஸ்பூன் எடுத்து அவற்றுடன் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் கலந்து முகத்தில் மற்றும் கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
இதனை குளியல் பொடியாகவும் பயன்படுத்தலாம். குளிக்கும்போது சோப்பிற்கு பதிலாக இதனை உபயோகிங்கள். பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அவர்களின் மென்மையான சருமத்திற்கு ஏற்ற வகையில் இவை பாதுகாக்கும்.
பெரியவர்களுக்கு சுருக்கங்களை போக்கும். சரும வியாதிகளை குணப்படுத்தும். முகப்பருக்களை வரவிடாது. கருமையை போக்கும். தொடர்ந்து உபயோகித்தால் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications



