Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பாட்டி சொல்லும் மூலிகை வாசனை பொடி- எல்லா சரும பிரச்சனைகளுக்கும் !!
அந்த காலத்தில் மேனி அழகைப் பராமரிக்க நமது பாட்டிகள் மூலிகைகள் கலந்த குளியல் பொடியை தயார் செய்து உபயோகித்தனர்.
இதனால்தான் அவர்களுக்கு சருமம் வயதானாலும் மெருகு குறையாமல் இருப்பதற்கு காரணம். அவைகள் எல்லாவித சரும அலர்ஜிகளை போக்கி, சருமத்தை அழகாக்கின்றன. பொலிவை தருகின்றன.

இது போன்ற பாட்டி குறிப்புகளை நாம் பின்பற்றினால் இந்த மாசுபட்ட சுற்று சூழ் நிலைகளால எவ்வித பாதிப்பும் இல்லாமல் உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம்.
நாம் உபயோகிக்கும் க்ரீம் மற்றும் மற்ற அழகு சாதனங்களால் லட்சக்கணக்கான செல்கள் பாதிப்படைகின்றன. இவை சரும பாதிப்புகளை தருவதோடு, விரைவில் முதுமையான தோற்றம் பெற காரணங்களாகின்றன.
இந்த மூலிகை குளியல் பொடி சருமத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களையும் ரசாயனங்களையும் அகற்றி, பாதிப்படைந்த சருமத்தை சீர் செய்கின்றன.
பாட்டி சொல்லும் மூலிகை குளியல் பொடியை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையானவை :
கஸ்தூரி மஞ்சள் பொடி - அரை கப் அளவு
சந்தனப் பொடி - கால் கப்
கடலை மாவு - அரை கப்
பச்சைப் பயிறு பொடி - 1 கப்
வேப்பிலை பொடி -அரை கப்
கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சைப் பயிறு மற்றும் வேப்பிலையை வெயிலில் காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இவற்றுடன் கடலை மாவு மற்றும் சந்தனத்தை கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை 2 ஸ்பூன் எடுத்து அவற்றுடன் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் கலந்து முகத்தில் மற்றும் கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
இதனை குளியல் பொடியாகவும் பயன்படுத்தலாம். குளிக்கும்போது சோப்பிற்கு பதிலாக இதனை உபயோகிங்கள். பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அவர்களின் மென்மையான சருமத்திற்கு ஏற்ற வகையில் இவை பாதுகாக்கும்.
பெரியவர்களுக்கு சுருக்கங்களை போக்கும். சரும வியாதிகளை குணப்படுத்தும். முகப்பருக்களை வரவிடாது. கருமையை போக்கும். தொடர்ந்து உபயோகித்தால் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications















