Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?
ஜொலிக்கிற சருமம் வேணும்னா சாமந்தி பூ ஃபேஸியல் பேக் ட்ரை பண்ணி பாருங்க!!
நமது இயற்கையான மூலிகை செடிகள் பல அற்புதங்கள் நமது அழகிற்கு தருகின்றன. இவை அழகை அதிகப்படுத்துவததோடு, சரும பாதிப்பிலிருந்து நம்மை காக்கின்ரன. அவ்வாறான குறிப்புகள் இங்கே காணலாம்.
சாமந்தி பூவின் இதழகளை அரைத்து பிறந்த குழந்தைக்கு பூசி குளிக்க வைக்கும் பழக்கம் இன்றக்கும் சில கிராமங்களில் வழக்கம் உள்ளது.பூவின் நிறத்திலேயே சரும நிறம் மாறும் என்பது கண்கூடான உண்மை.

அதுபோல் பல இயற்கை மூலிகைகள் நமது சருமத்திற்கு மாயாஜாலத்தை தருகிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறானா பொருட்களை இங்கு காண்போம்.

சாமந்தி பூ ஃபேஸ் பேக் :
புதிதான சாமந்திப் பூ இதழ்கள் - கைப்பிடி
பால் - சிறிது
தேன் - 1 ஸ்பூன்
சாமந்தி இதழ்களை அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

அரோமா ஃபேஸ் மாஸ்க் :
தேவையானவை :
சந்தனம் - 1 ஸ்பூன்
ரோஸ் எண்ணெய் - 2 துளி
லாவெண்டர் எண்ணெய் - 2 துளி
கடலைமாவு - 1 ஸ்பூன்
மோர் - சிறிது

அரோமா ஃபேஸ் மாஸ்க் :
மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து கலக்கும் அளவிற்கு மோர் விட்டு குழைத்துக் கொள்ளுங்கள். வாரம் 3 நாட்கள் இரவு படுப்பதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சுருக்கம், கருமை, பரு எல்லாம் மறைந்து முகம் பளபளக்கும்.

ஹெர்பல் ஸ்க்ரப் :
கோதுமை தவிடு
சந்தனம்
துளசி
கோதுமையை சலித்து அந்த தவிட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த சந்தனம், துளசி சாறு கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் காய விட்டு கழுவினால், முகம் மின்னும்.

சந்தன பேக் :
சந்தனக் கல்லில் ரோஸ் வாட்டர் வொட்டு சந்தனத்தை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் சிறிது பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் பொலிவு தெரியும்.



Click it and Unblock the Notifications