Just In
- 44 min ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 2 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முகப்பருக்களை குணப்படுத்துவதற்கான முறையான பராமரிப்பு
* முகத்தில் பருக்கள் இருந்தால், தினமும் இரண்டு முறை கிளின்சிங் செய்ய வேண்டும். ஏனெனில் சருமத்தில் பருக்கள் இருந்து அழுக்குகள் அதிகம் படிந்தால், அவை பருக்களை இன்னும் அதிகமாக்கிவிடும். ஆகவே பருக்களை சரிசெய்ய தினமும் இரண்டு முறை கிளின்சிங் செய்ய வேண்டும். கிளின்சிங் செய்தால், அவை அழுக்குகள், அதிகமான எண்ணெய் போன்றவற்றை நீக்கிவிடும். ஆகவே கிளின்சிங் செய்ய வேண்டுமெனில், பால் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். ஒருவேளை பருக்கள் உடைந்துவிட்டால், அவை பரவாமல் இருக்க பென்சோயில் பெராக்சைடு இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்துவது நல்லது.
* பருக்களை அகற்றும் போது, வேரோடு அகற்றும் படியாக இருக்க வேண்டும். இதற்கு தினமும் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள், அதிகப்படியான எண்ணெய் போன்றவை நீங்கி, பருக்கள் குறைந்து, சருமம் மென்மையாகும்.
* எப்போது மேக்-கப் போட்டாலும், இரவில் படுக்கும் முன் அதனை நீக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால், பருக்கள் உடைந்து பரவி விடும். ஆகவே மேக்-கப்பை நீக்குவதற்கு, காட்டனில் டோனரை நனைத்து நன்கு துடைத்துவிட்டு, பின் தூங்க வேண்டும். அதிலும் டோனரில் ஆல்கஹால் ப்ரி டோனரைப் பயன்படுத்துவது நல்லது. ஆல்கஹால் இருக்கும் டோனரைப் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு வறட்சியை ஏற்படுத்தி, அரிப்பை உண்டாக்கும்.
* பருவநிலை மாறுபாட்டினாலும் சருமம் பாதிக்கப்படும். அதிலும் குளிர்காலம் என்றால், சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவை சருமத்திற்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்திவிடும்.
* பருக்கள் உள்ளது என்று அதனை போக்குவதற்கு உடைக்க கூடாது. உடைத்தால், அதில் உள்ள நீர் போன்ற திரவம் முகத்தில் பரவி, அதிகமான பருக்களை உண்டாக்கிவிடும். பருக்கள் இயற்கையாக உடைந்தால், அதிலிருந்து வரும் திரவத்தை காட்டன் கொண்டு துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிட வேண்டும்.
* எலுமிச்சை மிகச் சிறந்த பருக்களைப் போக்கும் ஒரு பொருள். எனவே எலுமிச்சையைக் கொண்டு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தேய்க்க வேண்டும். இதனால் பருக்கள், இறந்த செல்கள் போன்றவை போய்விடும். அதேசமயம் எலுமிச்சை சருமத்திற்கு பயன்படுத்தினால் வறட்சி ஏறப்டும். ஆகவே எலுமிச்சையை பயன்படுத்தியப் பின், மாய்ச்சுரைசரை மறக்காமல் தடவ வேண்டும்.
மேற்கூறியவையே பருக்களை போக்க முறையாக தினமும் செய்ய வேண்டிய செயல்கள். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.