Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கூந்தலில் நுனி பிளவா? பப்பாளி பேக் ட்ரை பண்ணுங்க
கூந்தல் ஆரோக்கியத்தை கொண்டே உடலில் போதுமான சத்துக்கள் உள்ளதா என கண்டறியலாம். உடலில் சத்துக்கள் மிகக் குறைந்தால் முடி அடர்த்தி இல்லாமல், முடி உதிர்ந்து காணப்படும். கூந்தல் வளர்ச்சி மரபு ரீதியாகவும் சார்ந்து இருக்கும்.
நமது கூந்தல் முழுக்க புரோட்டினால் ஆனது. அதற்கு போஷாக்கினை விட்டமின்களும் தருகின்றன. இந்த இரு சத்துக்களும் குறைந்தால் முடி உதிரும்.

அதன் முதல் அறிகுறி, நுனி பிளவு. நுனி பிளவடையும்போது, சிறிது சிறிதாக அதிகமாகி, முடி உதிர்ந்து விடும். ஆகவே நுனி பிளவினை தடுக்க முயலுங்கள்.
அதிகப்படியான கூந்தல் வறட்சியினாலும், நுனி பிளவு ஏற்படும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். சரியான ஊட்டசத்து கொண்ட உணவினை சாப்பிட்டு, சிறிது பராமரிப்பிற்கு நேரம் ஒதுக்கினாலே கூந்தல் நுனிப் பிளவினை தடுக்கலாம்.
கூந்தல் மாஸ்க்:
பழுத்த பப்பாளி _ ஒரு கப்
தயிர் -அரை கப்
பப்பாளியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. அதோடு விட்டமின்களும் உள்ளது. இவை கூந்தலுக்கு போஷாக்கு அளித்து, பாதிப்பினை சரி செய்கிறது.
கூந்தலின் அமில காரத் தன்மையையும் சமன் செய்கிறது.
தயிர் இயற்கையிலேயே ஈரப்பதத்தை கூந்தலுக்கு அளிக்கிறது. அது ஸ்கால்ப்பில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்கிறது.
பப்பாளியை நன்றாக மசித்து அதனுடன் தயிர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் போடவும். கூந்தல் நுனி வரை போட வேண்டும்.
20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலசவும். அடர்த்தி குறைவான ஷாம்புவை உபயோகப்படுத்தவும்.
வாரம் இரு முறை செய்தால் இரு வாரங்களுக்குள் நுனி பிளவு நின்று கூந்தல் மிருதுவாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.



Click it and Unblock the Notifications













