Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க...
தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!
ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் தற்போது பலருக்கு தலைமுடி அதிக அளவில் உதிர்வதால், பலரும் அதை நினைத்து வருத்தப்படுகின்றனர். மேலும் இதன் காரணத்தினாலேயே நிறைய பேர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
வழுக்கை தலையாவதை தடுக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
உங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்கிறதா? அதன் வளர்ச்சியைத் தூண்டி, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சக்தி வாய்ந்த ஆயுர்வேத வழிகளைப் பின்பற்றி வாருங்கள். இதனால் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? ஈஸியா சரிசெய்யலாம்...

வெண்ணெய்
வாரம் ஒருமுறை வெண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலசி வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

செம்பருத்தி
செம்பருத்தி பூவை அரைத்து நிழலில் உலர வைத்து, பின் அதனை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால், தலைமுடி நன்கு செழித்து வளரும்.

கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை மற்றும் 4 சின்ன வெங்காயத்தை அரைத்து, அதனை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் அலசினால், முடி உதிர்வது குறைந்து, முடி நன்கு கருமையான வளரும்.

வெந்தயம்
வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து தலையில் தடவி 1/2 மணிநேரம் கழித்து குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, முடி நன்கு மென்மையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

கடுக்காய், செம்பருத்தி, நெல்லிக்காய்
இந்த மூன்றையும் சரிசம அளவில் எடுத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், முடி நன்கு வளர்வதை நீங்களே காணலாம்.

செம்பருத்தி இலை
செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் ஆரோக்கியம் மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

மூலிகை எண்ணெய்
மருதாணி, செம்பருத்தி, ரோஜா, கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, பின் பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்ச்சி இறக்கி, நன்கு ஊற வைத்து, பின் அதனை தினமும் தலைக்கு தடவி வரை வேண்டும். இப்படி எப்போதுமே செய்து வந்தால், முடி உதிராது. ஆனால் சிலர் மாதம் ஒரு எண்ணெயை மாற்றுவார்கள். இப்படி செய்தால் முடி உதிரத் தான் செய்யும்.

குறிப்பு
ஒருமுறை இயற்கை வழிகளைப் பின்பற்ற ஆரம்பித்தால், அதனை முழு மனதுடன் நம்பி பின்பற்றி வர வேண்டும். மேலும் இயற்கை வழிகளைப் பின்பற்றும் போது, அதனால் சற்று தாமதமாகத் தான் முழு நன்மையையும் பெற முடியும். எனவே பொறுமை காத்து, இயற்கை வழிகளைப் பின்பற்றி, நன்மை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications











