Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கோடையில் பாதங்களை கவனிங்க!

பாதங்களை கழுவுங்கள்
அடிக்கடி குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவுங்கள். இதனால் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும். பழைய ஷூ, சாக்ஸ் போன்றவைகளை மாற்றுங்கள். சில செருப்புகள் நீரில் பட்டதும், நீரை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை இருக்கும். அந்த நீரில் செருப்பு ஊறி அதனால் துர்நாற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட செருப்புகளை நீர் பட்டதும் உடனடியாக வெயிலில் காய வைக்கவும்.
உலர்வாக வையுங்கள்
வியர்வை மட்டுமல்லாமல் நீங்கள் அணியும் சில பொருட்களான ஷு, சாக்ஸ் போன்றவையும் உங்கள் மீது துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம். வெய்யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அவ்வாறு அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தினமும் சாக்ஸை துவைத்துப் பயன்படுத்த வேண்டும். கூடுமானவரை பருத்தியால் செய்யப்பட்ட சாக்ஸ் அணிவது நல்லது. மேலும் சாக்ஸ் அணியும் முன் காலில் பவுடரை தடவவும். இது வியர்வையை தடுத்து காலை உலர்ந்த நிலையில் வைக்க உதவும்.
டேனின் டீ
கோடைகாலத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் வாசனைப் பொருட்கள் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல் வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற உணவுகளை உண்ணக்கூடாது. இதனால் வியர்வை மூலம் துர்நாற்றம் பரவுவது தடுக்கப்படும்.
டேனின்கள் கொண்ட தேநீரை தண்ணீரில் கலந்து 10 ஊறவைக்கலாம். பின்னர் பாதங்களை அரைமணிநேரத்திற்கு அந்த தண்ணீரில் ரிலாக்ஸ்சாக ஊறவைக்கவும். இது அதிகம் வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தும். பாதங்களை உலர்வாக வைக்கும்.



Click it and Unblock the Notifications











