Just In
- 1 min ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 26 min ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 1 hr ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 4 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
Don't Miss
- News அஜித்திற்கு முன்பே நான் வந்துவிட்டேன்.. ஆனால்.. வாக்குச்சாவடியில் போலீசிடம் ஆதங்கப்பட்ட முதியவர்
- Movies ’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இதயத்தை பாதுகாக்கும் இதமான ஆலோசனை!
மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும் சிபிஆர்
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். சிபிஆர் பயிற்சி பெற்றிருந்தால் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சரியான முதலுதவி அளித்து அவர்களின் உயிரை பாதுகாக்க முடியும். எனவே உடனடியாக உங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளிலோ, பயிற்சி நிலையங்களிலோ சிபிஆர் பயிற்சி பெற்றுக்கொள்வதன் மூலம் நம் அன்பிற்குரியவர்களை பாதுகாக்கலாம்.
மதுவுக்கு குட்பை
தினசரி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் எளிதில் தாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள். அதிகம் மது அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதனால் இதயநோய், அல்லது பக்கவாதம் நோய் ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். மது அருந்துபவர்களுக்கு உடல்பருமன் ஏற்படுகிறது. இதுவே இதயநோய்க்கும் காரணமாகிறது. எனவே மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தினால் இதயநோய் ஏற்படாமல் தடுக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
நல்லா நடங்க
இதயநோய் ஏற்படாமல் தடுக்க எளிமையான காசு செலவில்லாத சிகிச்சை எது எனில் நடப்பதுதான். காலையிலும், மாலையிலும் அரைமணிநேரம் காலார நடங்கள். இதனால் இதய நோய் மட்டுமல்லாது உடல்பருமன், நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். காலையில் வாங்கிங் போவது மனதிற்கு உற்சாகத்தை தரும். நடைபயிற்சியைப் போல நீச்சலும் சிறந்த பயிற்சிதான் இதனால் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும் என்பது நிபுணர்களின் அறிவுரை.
கெட்ட கொழுப்புள்ள உணவு
ட்ரான்ஸ்பேட் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. வறுத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளில் ட்ரான்ஸ்பேட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இந்த கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதால் இதயநோய், டைப் 2 நீரிழிவு, பக்கவாதநோய் ஏற்படுகிறது. எனவே டின்களில் அடைத்த உணவுகளையும், வறுத்த உணவுகளையும் தவிர்ப்பதன் மூலம் இதயநோயை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.