Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உறவுகளினால் பெண்கள் தங்களது உறக்கத்தை தொலைக்கும் தருணங்கள்!!!
திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண் தனது உறக்கத்தை தொலைக்கிறாள். கணவனுக்காக என்று தொடங்கி, கரு, குழந்தை வளர்ப்பு, தாய் உள்ளம் என தனது கடைசி நாள் வரை ஏதேனும் ஓர் உணர்ச்சியின் காரணமாக தனது உறக்கத்தை தனது உறவுகளுக்காக தியாகம் செய்கிறாள் மனைவி, தாய் எனும் கதாப்பாத்திரம் ஏற்கும் பெண்.
தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் சரி, தன் குடும்பத்தில் வேறு யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் சரி உறக்கத்தை தொலைப்பது என்னவோ பெண் தான். இது போன்ற பல தருணங்கள் பெண்களின் வாழ்க்கையில் அவர்களது உறக்கத்தை களவாடி சென்றுவிடுகிறது....

கணவர் வீட்டிற்கு தாமதமாக வருதல்
திருமணமாகி மூன்று நாட்களாக இருந்தாலும் சரி, முப்பது வருடங்கள் ஆனாலும் சரி, கணவன் தாமதமாக வீட்டிற்கு வரும் நேரத்தில் மனைவி தனது தூக்கத்தை தொலைத்துவிடுகிறாள்.

கர்ப்பக் காலம்
கர்ப்பமாக இருக்கும் ஆறு, ஏழாவது மாதத்தை கடக்கும் போது கண்டிப்பாக ஓர் பெண் தனது தூக்கத்தை தொலைக்க ஆரம்பிப்பாள். இது இத்துடன் நின்றுவிடுவது இல்லை.

குழந்தை வளரும் போது
குழந்தை பிறந்து அது வளரும் போது ஆண்களை விட பெண் தான் அதிகம் தூக்கத்தை தொலைக்கிறாள். பசிக்காக அழுகும் போதும், உடல்நல கோளாறுகளினால் அழுகும் போதும், சமாதானப்படுத்தி உறங்க வைப்பதற்குள் இவளது தூக்கம் காணாமல் போய்விடும்.

பிள்ளைகள் சாப்பிட நேரத்திற்கு வராமல் இருத்தல்
பெரும்பாலும் பிள்ளை வெளியே சென்று இரவு சாப்பாட்டிற்கு வீடு திரும்பவில்லை எனில், அவன் சாப்பிட்டானோ இல்லையோ என்ற ஏக்கமே தாயின் உறக்கத்தை காணாமல் போக செய்துவிடுகிறது.

கணவன் / பிள்ளைக்கு உடல்நலம் சீர்கெடும் போது
வீட்டில் யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும், அவர்களை விட அதிகமாக உறக்கத்தை தொலைப்பவள் பெண் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத நிதர்சனம்.

நினைத்தது நடக்காமல் இருக்கும் போது
எத்தனை செய்தாலும் கூட, தான் நினைத்தது தன் கணவன் அல்லது பிள்ளைகளின் மூலம் நடக்காமல் போகும் போது அந்த பெண் மன அழுத்தத்தின் காரணமாக தனது தூக்கத்தை தொலைக்கிறாள்.

காதல் தோல்வி
ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் கூட காதல் தோல்வி தூங்கவிடாமல் செய்துவிடும். இதில் பாலினம் விதிவிலக்கு அல்ல.



Click it and Unblock the Notifications