Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
உலகின் நீண்ட நாள் வாழ்ந்த இந்திய வம்சாவளி தம்பதி 110 வயதில் மரணம்!
ஒரு 15 - 20 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து என்பது எங்கோ, யாரோ ஒருவரின் மூலம் கேள்விப்படுவோம். ஆனால், இன்று நமது குடும்பத்திலேயே குறைந்தபட்சம் தலைமுறைக்கு ஓரிருவர் விவாகரத்து செய்வதை நாம் காண முடியும்.
மேற்கத்தியம், மேற்கத்திய கலாச்சாரம் என்று நமது வாழ்வியலில் உட்புகுந்ததோ அன்றிலிருந்து தான் உறவுகளில் விட்டுகொடுத்து போவது, அனுசரித்து போவது போன்றவை அதிகரித்து, மெல்ல, மெல்ல என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்ற பெயரில் பரஸ்பர விவாகரத்து என பிரிவுகள் அதிகரிக்க ஆரம்பித்தன.
இந்த தலைமுறை குழந்தைகள் 60-ம் கல்யாணம் என்றால் என்ன? என்ற கேள்வி கேட்கும் அளவிற்கு நாம் வந்துவிட்டோம். இத்தனை இருந்தும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு ஜோடி உலகின் நீண்ட நாள் திருமண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என சாதனை புரிந்துள்ளனர்....

கரம்சந்த்!
லண்டனில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான் இந்த கரம்சந்த். இவர் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சில இயற்கை காரணங்களால் மரணம் அடைந்தார்.

90 வருடங்கள்!
கரம்சந்த் இறக்கும் போது அவரது வயது 110, அவரது மனைவி கர்தாரியின் வயது 103. இவர்கள் ஒன்றாக வாழ்ந்த திருமண வருடங்கள் மொத்தம் 90.

உலக சாதனை!
இவர்கள் அதிகாரப்பூர்வமாக அதிக ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜோடி என்ற உலக சாதனை செய்துள்ளனர்.

சண்டைகளே இல்லை!
இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் கரம்சந்த் மற்றும் கர்தாரி பெரிதாக சண்டையிட்டுக் கொண்டதே இல்லை என கூறுகின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து தான் வாழ்ந்து வந்துள்ளனர் இவர்கள்.

பிறப்பு!
கரம்சந்த் பிறந்தது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பஞ்சாப் பகுதியில். இவர் பிறந்த ஆண்டு 1905. 1925-ல் கரம்சந்த் கர்தாரியை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதியினர் கடந்த 1965-ம் ஆண்டு பிராட்போர்ட்-க்கு குடியேறினர்.

நான்கு தலைமுறை!
கரம்சந்த் தனது நான்கு தலைமுறையை கண்டுவிட்டார். இவருக்கு எட்டு குழந்தைகள், 27 பேர குழந்தைகள். டஜன் கணக்கில் கொள்ளுப்பேர பிள்ளைகள் இருக்கின்றனர்.
எந்த சாதனையை வேண்டுமானால் தற்போது உலகில் வாழும் மக்கள் முறியடிக்கலாம். ஆனால், கரம்சந்த் - கர்தாரியின் இந்த சாதனையை முறியடிப்பது இனி சாத்தியமற்ற ஒன்று என்பதை மட்டும் அடித்து சொல்ல முடியும்.



Click it and Unblock the Notifications











