Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
மாதவிடாய் காலங்களில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பவை!!
பெண்கள், குழந்தை பேரு காலங்களில் பெண் குழந்தையை விட ஆண் குழந்தையை அதிகம் விரும்ப ஒரு காரணம், மாதவிடாய் காலங்களில் அவர்கள் அனுபவிக்கும் வலி. இரத்தபோக்கு உடலளவிலும், வீட்டில் உள்ள பெரியோர்கள் தீட்டு என்று சொல்லி மனதளவிலும் வலியை அதிகப்படுத்துவர்கள்.
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
இந்த மூன்று முதல் ஐந்து நாட்களில் அவர்கள் எதிர்கொள்ளும் வலி மரணத்தையும் விடக் கொடியது. அதிலும், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு இந்த மூன்று நாட்கள் நரகத்தை போல தான் நகரும்.
மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா?
வலிமிகுந்த இந்த நாட்களில், திருமணமான பெண்கள் அவர்களது கணவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதைப் பற்றி இனி தெரிந்துக் கொள்ளலாம்....

பணிவாக பழகுங்கள்
மாதம் முழக்க இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் இந்த மூன்று நாட்களிலாவது அவர்களுடன் பணிவாக பழகுங்கள். இது அவர்களை மனதளவில் மென்மையாக உணர உதவும்.

ஓய்வளியுங்கள்
அவர்கள் தினமும் செய்யும் வேலைகளில் இருந்து இந்த மூன்று நாட்கள் அவர்களுக்கு ஓய்வளியுங்கள். அல்லது அவர்களே அந்த வேலைகளை செய்ய முற்பட்டாலும், அந்த வேலைகளில் உடனிருந்து உதவி செய்யுங்கள்!

அன்பை வெளிக்காட்டுங்கள்
பெண்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள், தங்களது அன்பிற்குரியவர்களின் கடுமையான வார்த்தைகளை தவிர. எனவே, இந்த நாட்களில் அவர்களிடம் அதிகம் அன்பை வெளிப்படுத்துங்கள். இது அவர்கள் வலியை மறக்க உதவும்.

பொறுமையாக இருங்கள்
இந்த நாட்களில் அவர்கள் என்ன செய்தாலும் பொறுமையாக இருங்கள். மாதவிடாய் இரத்தப் போக்கின் காரணமாக ஏற்படும் வலியின் வெளிப்பாடாய் அவர்களுக்கு கோவமும், மன சோர்வும் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, அவர்கள் என்ன கூறினாலும், செய்தாலும் பொறுமையாக இருந்து அவர்களை பணிவாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்விகள் கேட்க வேண்டாம்
இந்த நாட்களில் போய், அவர்களிடம் முன்பு நடந்த ஏதேனும் விஷயத்தைப் பற்றிய கேள்விகள் கேட்டுக் குடைய வேண்டாம். இது, அவர்களை மனதளவில் மேலும் வலிமையிழக்க செய்யும்

சண்டையிட வேண்டாம்
இந்த வலிமிகுந்த நாட்களில் அவர்களிடம் உங்கள் கோவத்தையோ அல்லது ஏதேனும் காரணம் குறித்தோ சண்டையிடாதீர்கள். இது, அவர்களது உணர்வுகளை பாதிக்கும். ஏன், உறவுகளிலும் கூட விரிசல்கள் ஏற்பட காரணமாகிவிடும்.

அவர்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள்
சமையல், பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற ஏதாவது அவர்களுக்கு பிடித்ததை செய்து அவர்களை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியமான உணவுகள்
காய்கறி, பழங்கள் என அவர்களுக்கு அந்த நாட்களில் ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகளை வாங்கி வந்துக் கொடுத்து. அவர்களது அன்பினை பெற முயற்சி செய்யுங்கள். மாதத்தில் இந்த மூன்று நாட்கள் நீங்கள் அவர்களை சரியாக புரிந்து, பார்த்துக் கொண்டால், மற்ற அணைத்து நாட்களும் அவர்கள் பல மடங்கு அதிகமான அன்புடன் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள்!!



Click it and Unblock the Notifications
