Latest Updates
-
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
மாதவிடாய் காலங்களில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பவை!!
பெண்கள், குழந்தை பேரு காலங்களில் பெண் குழந்தையை விட ஆண் குழந்தையை அதிகம் விரும்ப ஒரு காரணம், மாதவிடாய் காலங்களில் அவர்கள் அனுபவிக்கும் வலி. இரத்தபோக்கு உடலளவிலும், வீட்டில் உள்ள பெரியோர்கள் தீட்டு என்று சொல்லி மனதளவிலும் வலியை அதிகப்படுத்துவர்கள்.
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
இந்த மூன்று முதல் ஐந்து நாட்களில் அவர்கள் எதிர்கொள்ளும் வலி மரணத்தையும் விடக் கொடியது. அதிலும், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு இந்த மூன்று நாட்கள் நரகத்தை போல தான் நகரும்.
மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா?
வலிமிகுந்த இந்த நாட்களில், திருமணமான பெண்கள் அவர்களது கணவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதைப் பற்றி இனி தெரிந்துக் கொள்ளலாம்....

பணிவாக பழகுங்கள்
மாதம் முழக்க இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் இந்த மூன்று நாட்களிலாவது அவர்களுடன் பணிவாக பழகுங்கள். இது அவர்களை மனதளவில் மென்மையாக உணர உதவும்.

ஓய்வளியுங்கள்
அவர்கள் தினமும் செய்யும் வேலைகளில் இருந்து இந்த மூன்று நாட்கள் அவர்களுக்கு ஓய்வளியுங்கள். அல்லது அவர்களே அந்த வேலைகளை செய்ய முற்பட்டாலும், அந்த வேலைகளில் உடனிருந்து உதவி செய்யுங்கள்!

அன்பை வெளிக்காட்டுங்கள்
பெண்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள், தங்களது அன்பிற்குரியவர்களின் கடுமையான வார்த்தைகளை தவிர. எனவே, இந்த நாட்களில் அவர்களிடம் அதிகம் அன்பை வெளிப்படுத்துங்கள். இது அவர்கள் வலியை மறக்க உதவும்.

பொறுமையாக இருங்கள்
இந்த நாட்களில் அவர்கள் என்ன செய்தாலும் பொறுமையாக இருங்கள். மாதவிடாய் இரத்தப் போக்கின் காரணமாக ஏற்படும் வலியின் வெளிப்பாடாய் அவர்களுக்கு கோவமும், மன சோர்வும் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, அவர்கள் என்ன கூறினாலும், செய்தாலும் பொறுமையாக இருந்து அவர்களை பணிவாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்விகள் கேட்க வேண்டாம்
இந்த நாட்களில் போய், அவர்களிடம் முன்பு நடந்த ஏதேனும் விஷயத்தைப் பற்றிய கேள்விகள் கேட்டுக் குடைய வேண்டாம். இது, அவர்களை மனதளவில் மேலும் வலிமையிழக்க செய்யும்

சண்டையிட வேண்டாம்
இந்த வலிமிகுந்த நாட்களில் அவர்களிடம் உங்கள் கோவத்தையோ அல்லது ஏதேனும் காரணம் குறித்தோ சண்டையிடாதீர்கள். இது, அவர்களது உணர்வுகளை பாதிக்கும். ஏன், உறவுகளிலும் கூட விரிசல்கள் ஏற்பட காரணமாகிவிடும்.

அவர்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள்
சமையல், பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற ஏதாவது அவர்களுக்கு பிடித்ததை செய்து அவர்களை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியமான உணவுகள்
காய்கறி, பழங்கள் என அவர்களுக்கு அந்த நாட்களில் ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகளை வாங்கி வந்துக் கொடுத்து. அவர்களது அன்பினை பெற முயற்சி செய்யுங்கள். மாதத்தில் இந்த மூன்று நாட்கள் நீங்கள் அவர்களை சரியாக புரிந்து, பார்த்துக் கொண்டால், மற்ற அணைத்து நாட்களும் அவர்கள் பல மடங்கு அதிகமான அன்புடன் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள்!!



Click it and Unblock the Notifications











