Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
திருமணமான புதியதில் அனைத்து தம்பதிகளும் செய்யும் பொதுவான தவறுகள்!!
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்கள். ஆகமொத்தம் திருமணமான முதல் மூன்று மாதங்களில் யார் ஒருவர் சரியாக வாழ்க்கையை புரிந்து நடந்துக் கொள்கிறார்களோ, அவர்களது வாழ்க்கை வாழ்நாள் முழுக்க சிறந்து காணப்படும்.
பெரும்பாலும் திருமணமான புதுமணத் தம்பதிகள் செய்யும் சில தவறுகளை சரி செய்துக் கொண்டாலே அவர்கள் வாழ்க்கையை முழுமையாக உணர முடியும். புதிய வாழ்க்கை, இருவர் அடங்கிய உலகம், மனதில் எழும் ஒர்விதமான ஆசைகள் இவற்றை கட்டுப்படுத்தினாலே போதுமானது.
திருமணமானவுடன் நண்பர்கள், உறவினர்களுடன் செலவிடும் நேரத்தை குறைப்பது, அனைத்தையும் விட்டுக் கொடுப்பது, உளறிக் கொட்டுவது என சிலவற்றை நீங்கள் திருமணமான புதிதில் கட்டாயம் செய்யாமல் தவிர்க்க தான் வேண்டும்....

அவசரம் காட்டுதல்
உடலுறவு மட்டுமின்றி மற்ற அனைத்து இல்லற விஷயங்களிலும் கூட உடனே செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பதை தவிருங்கள். அந்தந்த விஷயங்கள் அந்தந்த சூழல் அமையும் போது செய்தால் தான் அது உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். எனவே, நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உடனே செய்து முடிக்க நாளையே உங்கள் வாழ்க்கை முடிந்துவிட போவதில்லை.

எதிர்காலத்தை பற்றிய சிந்தனை
எதிர்காலம் பற்றிய திட்டமிடுதல் அவசியம். ஆனால், அதற்கென எதிர்காலத்திலேயே வாழ்ந்துவிட வேண்டாம். சில சமயங்களில் நினைத்தது நடக்காவிடில் மனதில் வலி பெரிதாய் ஏற்படும். எனவே, சிந்தனையாக இருந்தாலும் கூட நிதானமாக செயல்படுங்கள்.

விட்டுக் கொடுத்தல்
தம்பதி மத்தியில் விட்டுக் கொடுப்பது முக்கியம் தான். அதற்கென உங்களுக்கு பிடித்ததைக் கூட விட்டுக் கொடுக்க வேண்டும் என்றில்லை. திருமணமான புதியதில் ஓர்வித மோகத்தில் விட்டுக் கொடுத்து விட்டு சிறிது காலம் கழித்து சொல்லிக் காண்பிப்பது அல்லது மீண்டும் விட்டுக் கொடுக்க முடியாமல் போனால் சண்டைகள் தான் ஏற்படும்.

தனி உலகம் வேண்டாம்
உங்கள் நேரத்தை இழக்க வேண்டாம். திருமணம் ஆனவுடன் இருவரும் தனி உலகினுள் சென்றுவிட வேண்டாம். நிறைய பேர் நண்பர்கள், உறவினர் போன்றவருடன் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது பின்னாட்களில் சிறிய பிரிவென்றாலும் மனதளவில் பெரிய வலியை உண்டாக்கும்.

உங்களை போலவே இருக்க வேண்டும் என்ற எண்ணம்
திருமணம் ஆனவுடன் நிறைய பேர், தங்களை போலவே தங்களது துணையும் இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என நினைப்பது உண்டு. இப்படி இருப்பதால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் தான் குறையும்.

கச்சிதமாக இருக்க வேண்டும்
யாராலும் அனைத்து செயல்களிலும் கச்சிதமாக இருக்க முடியாது. எனவே, இதை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.

உளறிக் கொட்ட வேண்டாம்
உண்மையை மறைப்பது தவறு தான். ஆனால், உங்கள் இருவருக்குள்ளும் முழு புரிதல், உங்கள் மனநிலை மற்றும் சூழலை அவர் முழுமையாக புரிந்துக் கொள்வார் என்ற நிலை ஏற்படும் வரை அனைத்தையும் உளறிக்கொட்டிவிட வேண்டாம்.

நடிக்க வேண்டாம்
உங்கள் துணையை மகிழ்ச்சியடைய வைக்கிறேன் என்று நடிக்க வேண்டாம். பிறகு வாழ்நாள் முழுக்க நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

கற்றுக் கொள்ளுங்கள்
கண்டிப்பாக உங்கள் இருவருக்கும் பிடிக்காத விஷயத்தை மீண்டும், மீண்டும் மறந்தும் செய்துவிட வேண்டாம். தெரிந்தே செய்வது உறவில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடும்.



Click it and Unblock the Notifications