Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
பெண்களே.... ஆண்களை எப்போதும் மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு பேசாதீங்க...!

* மாமனார்: எப்போதும் வீட்டில் சண்டை வந்தால், உடனே அனைத்து மனைவியர்களின் வாயிலிருந்தும் வரும் சொல், "உன் அப்பாவை மாதிரியே நடந்துக்குற பார்!" என்று சொல்வார்கள். எந்த ஆணுக்கும் எப்போதும் பொதுவாக அவர்களது அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் பிடிக்காது. அவர்களுக்கு அவர்களது அப்பா மிகவும் முக்கியமான ஒருவர் தான், ஆனால் அதற்காக அவர்களுடன் ஒப்பிட்டு பேசினால் சுத்தமாக பிடிக்காது. மேலும் எப்போது அவர்களிடம் ஒரு முறை பேசி சண்டை வந்ததோ, அப்போதிருந்தே அதை மறுபடியும் பேசுவதை விட்டுவிட வேண்டும். ஏனெனில் அத்தகைய பேச்சு ஒரு நல்ல உறவுகளுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்திவிடும்.
* நண்பர்கள்: எந்த கணவனுக்கும் தன் மனைவிக்கு ஆண் நண்பர்கள் இருந்தாலும் பிடிக்காது. என்ன தான் நண்பர்களாக இருந்தாலும், தன் மனைவியை யாருக்கும் விட்டு தர மாட்டார்கள். இது தெரிந்தும், அவர்களிடம் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அந்த நேரமே அவ்வளவு தான். மேலும் கணவன்மார்கள் அனைவரும், தன் மனைவிக்கு தானே ஒரு நண்பன் மற்றும் அனைத்தும் என்றும் மனதில் நினைத்திருப்பார்கள். ஆகவே அத்தகைய கணவரை எப்போதும் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.
* பழைய காதலன்: திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்து, அவன் நல்லவனாக இருந்தும், திருமணம் செய்ய முடியாமல் போய், மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு, அவரிடம் உங்களது முதல் காதல் பற்றி சொல்லியும், உங்களை திருமணம் செய்தவர், உங்களை சந்தோஷமாக வைத்து, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழும் போது, ஒரு சில நேரத்தில் உங்கள் கணவன், ஏதோ ஒரு டென்சனில், உங்களை திட்டிவிட்டால், அப்போது நீங்கள் வாய் தவறிக் கூட பழைய காதலனுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். ஏனெனில் எந்த இடத்தில் பாசம் இருக்கிறதோ, அதே இடத்தில் பொறாமையும், கோபமும் இருக்கும். ஆகவே எப்போதும் இவர்களுடன் கணவனை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
* தோழியின் கணவன்: ஆண்களுக்கு ஒப்பிட்டுப் பேசினாலே பிடிக்காது என்று சொல்லும் போது, அது யாராக இருந்தால் என்ன? அதிலும் உதாரணமாக, உங்கள் தோழியின் கணவன் அவளுக்கு ஒரு நல்ல சேலை வாங்கி வந்து கொடுத்து, உங்கள் கணவன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு, தன்னால் முடிந்த ஒன்றை ஆசையாக வாங்கி வரும் போது, அந்த நேரத்தில் நீங்கள் அதைப்பற்றி பேசும் போது கண்டிப்பாக அவர்களுக்கு கோபம் வரும். ஆகவே இது போன்ற விஷயத்திலும் கவனமாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
எனவே இத்தகையவர்களுடன் எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் கணவன் என்ன தான் செய்தாலும், அவர்களது குணத்தை, சூழ்நிலையை மற்றும் அனைத்தையும் புரிந்து நடந்துகொண்டால், கண்டிப்பாக வாழ்க்கையானது நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
