Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
வித்தியாசமான... ஜஃப்ரானி புலாவ்
இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம். ஆனால் சற்று இனிப்பாகவும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும் ஜஃப்ரானி புலாவ் ரெசிபியை பற்றி பார்த்திருக்கமாட்டோம். பொதுவாக புலாவ் என்றால் லக்னோ தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் அங்கு தான் பலவகையான சுவையில் புலாவ் ஆனது தயாரிக்கப்படும்.
இப்போது அவற்றில் ஒன்றாக ஜஃப்ரானி புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
பால் - 1/4 கப்
குங்குமப்பூ - 1 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பாதாம் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாலில் குங்குமப்பூவை சேர்த்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், அரிசியைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் குங்குமப்பூ பால், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 15 நிமிடம் மூடி வேக வைக்க வேண்டும்.
அதே சமயத்தில் மற்றொரு அடுப்பில் சிறிய வாணலியை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின் சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு, சர்க்கரையானது கரைந்ததும், முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை சேர்த்து வதக்கி இறக்கி விட வேண்டும்.
சாதமானது வெந்ததும், அதில் ஏலக்காய் பொடி தூவி கிளறி, வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கி விட வேண்டும்.
இப்போது வித்தியாசமான ஜஃப்ரானி புலாவ் ரெடி!!! இதன் மேல் புதினாவை தூவி பரிமாற வேண்டும்.



Click it and Unblock the Notifications
