Latest Updates
-
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க...
ஆரோக்கியத்தைத் தரும் ராகி உப்புமா
பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி, தோசைக்கு அடுத்தப்படியாக உப்புமா தான் காலை உணவாக இருக்கும். அத்தகைய உப்புமாவிலேயே பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ராகி உப்புமா. இந்த உப்புமா ரவையை கொண்டு செய்யப்படும் உப்புமாவை விட மிகவும் ஆரோக்கியமானது.
மேலும் மிகவும் ஈஸியாக செய்யக்கூடியதும் கூட. குறிப்பாக இந்த உப்புமாவானது எடையை குறைக்க நினைப்போருக்கு மிகவும் உகந்த காலை உணவாகும். சரி, இப்போது அந்த ராகி உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 2 கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2-3 (நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, உப்பு, சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இதனை பேஸ்ட் போல் கலக்காமல், ஈரமாக இருக்கும் மாவு போல் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் ராகி மாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
பின் உப்புமா போன்ற பதத்தில் வரும் போது, அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், ராகி உப்புமா ரெடி!!!



Click it and Unblock the Notifications