Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
பச்சை பட்டாணி இட்லி
காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைத்தால், அப்போது வீட்டில் பச்சை பட்டாணி, ரவை மற்றும் வெந்தயக்கீரை இருந்தால், எளிதில் சூப்பராக வித்தியாசமான சுவையில் ஒரு இட்லி செய்யலாம்.
இந்த இட்லி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும். இப்போது அந்த பச்சை பட்டாணி இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

ரவை - 2 கப் (வறுத்தது)
பச்சை பட்டாணி - 3/4 கப் (வறுத்து, லேசாக அரைத்தது)
வெந்தயக்கீரை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தயிர் - 2 டீஸ்பூன்
ஓட்ஸ் - 2 டீஸ்பூன்
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், வெந்தயக்கீரை, பட்டாணி, ஓட்ஸ், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைத்து, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும்.
பிறகு 10 நிமிடம் கழித்து, இட்லிப் பாத்திரத்தை திறந்து இட்லிகளை எடுக்க வேண்டும்.
இப்போது வித்தியாசமான பச்சை பட்டாணி இட்லி ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications