Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கொத்தமல்லி சப்பாத்தி
காலையில் எளிமையான முறையில் வித்தியாசமான மற்றும் ஆரோக்கியத்தை தரும் வகையில் ஒரு சப்பாத்தி செய்ய நினைத்தால், அதற்கு கொத்தமல்லி சப்பாத்தி சரியானதாக இருக்கும். அந்த கொத்தமல்லி சப்பாத்தியை செய்வது மிகவும் ஈஸியானது. மேலும் இந்த சப்பாத்திக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வீட்டு சமையலறையில் இருப்பவையே.
இப்போது அந்த கொத்தமல்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
கொத்தமல்லி - 3 கப் (நறுக்கியது)
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஈரத் துணியால் மூடி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் கொத்தமல்லி, சீரகம், மஞ்சள் தூள், கடலை மாவு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதனை சப்பாத்தி போன்று தேய்த்து, நடுவே சிறிது கொத்தமல்லி கலவையை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கொத்தமல்லி சப்பாத்தி ரெடி!!! இதனை பன்னீர் மசாலாவுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











