Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
குடைமிளகாய் பன்னீர் மசாலா

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1/4 கிகி (சிறிதாக வெட்டியது)
குடைமிளகாய் - 1/4 கிகி (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சிறிதாக வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பின் வறுத்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை போட்டு, ஒரு 3 நிமிடம் கிளறி இறக்கிவிட வேண்டும்.
இப்போது சுவையான குடைமிளகாய் பன்னீர் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











